விருதுநகர், பிப்.25- விருதுநகர் மாவட்டத்தில் காட்டுப் பன்றிகள் உள்ளிட்ட வன விலங்குகளால் பயிர்கள் நாசம டைகின்றன. வனத்துறையினர் நட வடிக்கை எடுப்பதில்லையென குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் புகார் தெரிவித்தனர். விருதுநகர் மாவட்ட விவசாயி கள் குறைதீர் கூட்டம் ஆட்சியர் வீ.ப. ஜெயசீலன் தலைமையில் நடை பெற்றது. மாவட்ட வருவாய் அலு வலர், கூட்டுறவுத்துறை-வேளாண் துறை அதிகாரிகள் உட்பட பலர் பங்கேற்றனர். அப்போது நடைபெற்ற விவா தம் வருமாறு: அரசு உத்தரவில் நகையின்றி பயிர்க்கடன் தர வேண்டுமென கூறப்பட்டுள்ளது. கூட்டுறவு வங்கி யின் செயலாளர்கள், நகையின்றி விவசாயிகளுக்கு கடன் தர முடி யாது என திருப்பியனுப்புகின்றனர் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கத் தின் மாவட்டச் செயலாளர் வி.முரு கன் தெரிவித்தார். அதற்கு பதிலளித்த கூட்டுறவு அதிகாரி, நகையின்றி பயிர்க்கடன் பெற இரு பிணையம் மட்டுமே வழங்க வேண்டும் என வழிகாட்டு நெறிமுறையில் கூறப்பட்டுள்ள தாக தெரிவித்தார். பயிர்க்கடன் வழங்கும் காலத்தை நீட்டிக்க விவசாயி ஒரு வர் கோரிக்கை விடுத்தார். அதற்கு ஆட்சியர், பரிசீலிக்கப்படும் என்றார். மேற்குத் தொடர்ச்சி மலையடி வாரப் பகுதியில் வன விலங்கு களால் பயிர்கள் சேதமடைகின்றன. விலங்குகளால் விவசாயிகள் உயி ரிழக்கும் நிலை உள்ளது. வனத் துறையினர் நடவடிக்கை எடுப்ப தில்லை. தற்போது, 120 கி.மீ தாண்டி வனத்திலிருந்து விளை நிலங்கள் உள்ள பகுதிகளுக்குள் காட்டுப் பன்றிகள் வந்து விட்டன. இதனால் பயிர்கள் நாசமாகின்றன. அவற்றை அப்புறப்படுத்த வனத் துறையினர் நடவடிக்கை எடுப்ப தில்லை. வனத்தையொட்டி மலை மாடுகளை மேய்ப்பதற்கு வனத் துறையினர் அனுமதிக்காமல் கெடு பிடி செய்கின்றனர். மாடுகளை மேய்ப்பவர்களுக்கு அடையாள அட்டை வழங்க வேண்டும். இப் பிரச்சனைகளைத் தீர்க்க முத்த ரப்புக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்ய வேண்டுமென தமிழ்நாடு விவசாயி கள் சங்கத்தின் மாவட்டத் தலை வர் அ.விஜயமுருகன் தெரிவித் தார். அதற்கு பதிலளித்த ஆட்சி யர், உரிய நடவடிக்கை எடுக்கப் படும் என்றார். தரணி சர்க்கரை ஆலை 300 கரும்பு விவசாயிகளிடம் கரும்பு களை வாங்கி விட்டு அதற்கான தொகை ரூ.6 கோடி தர மறுக்கி றது. நிலங்கள், நகைகள் அட மானம் வைத்து விவசாயம் செய்த வர்கள் கடுமையாகப் பாதிக்கப் பட்டு தற்போது வரை வட்டி செலுத்தி வருகின்றனர். இது குறித்து முதல்வர் தலைமையில் மாதம் தோறும் கூட்டம் நடத்தித் தீர்வு காண வேண்டுமென தமி ழக விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் ராமச்சந்திரராஜா கோரி க்கை விடுத்தார். அதற்கு பதில ளித்த ஆட்சியர், இப்பிரச்சனை அர சின் கவனத்திற்குக் கொண்டு செல் லப்படும் என்றார்.
கண்மாய்களை ஆக்கிரமித்து விவசாயம்
வத்திராயிருப்பு பகுதியில் கண்மாய்களை ஆக்கிரமித்து பலர் விவசாயம் செய்கின்றனர். அவர கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். பலர் நெல் அறுவடை செய்யும் நேரத்தில் கண்மாய் மதகுகளை திறந்து விடுகின்றனர். இதனால், நெற்கதிர்கள் சாய்ந்து அறுவடை செய்ய முடியாத நிலை உள்ளது என விவசாயி ஒருவர் தெரிவித்தார். அதற்கு ஆட்சியர், வருவாய்த்துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென உத்தரவிட்டார். சிவகாசியைச் சுற்றியுள்ள கண்மாய்களில் பட்டாசுக் கழிவு களை ஆலை நிர்வாகத்தினர் கொட்டி விடுகின்றனர் இதனால், கால்நடைகள்- விவசாயம் பாதிக் கப்படுகிறது. திருவில்லிபுத்தூர் பெரியகுளம் கண்மாயில் குடிசை போட்டுக் கொண்டு இரவு-பகலாக தண்ணீரை திறந்து விடுகின்றனர். எதிர்த்துக் கேட்டால் திட்டுகின்ற னர் என விவசாயிகள் புகார் தெரி வித்தனர்.