tamilnadu

img

5 மாதங்களாக கிடப்பில் போடப்பட்ட சாலை செப்பனிடும் பணி- விவசாயிகள் புகார்

உடுமலை. அக். 23- உடுமலை பகுதியில் 5 மாதங்களாக சாலை அமைக்கும் பணி கிடப்பில் போடப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. திருப்பூர் மாவட்டம், குடிமங்கலம் ஒன்றியத்தில் புக்குளம்-வெள்ளியம்பாளையம், புக்குளம்-சுண்டக் காம்பாளையம், பொன்னேரி செல்லும் பிரதான சாலை கள் பழுதடைந்த நிலையில், செப்பனிடும் பணிக்காக ஜேசிபி இயந்திரம் மூலம் தோண்டப்பட்டது. கடந்த 5 மாதங்களுக்கு முன் நடைபெற்ற இப்பணிகள் தொடராமல் திடீரென நிறுத்தி வைக்கப்பட்டது. இதனால் 4 கிராம மக்கள் மற்றும் விவசாயிகள் மிகுந்த சிரமப்பட்டு வரு கின்றனர். எனவே, மாவட்ட நிர்வாகம் தலையிட்டு உடனடி யாக மாற்றுப்பாதை அமைத்துக் கொடுக்க வேண்டும். மேலும், சாலை மற்றும் பாலம் கட்டும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என அப்பகுதியினர் கோரிக்கை விடுத் துள்ளார்.