விருதுநகர், பிப்.16- காவிரி ஆற்றுக்கு வந்த 250 டி.எம்.சி தண்ணீர் வீணாக கடலில் கலந்து விட்டது. எனவே, தமிழக அரசு, விரை வில் காவிரி-வைகை-குண்டாறு இணைப்புத் திட்டத்தை விரைவில் நிறைவேற்ற வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலா ளர் கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தி னார். விருதுநகரில் பிப்ரவரி 16 வியாழ னன்று செய்தியாளர்களை சந்தித்த கே.பாலகிருஷ்ணன் கூறியதாவது: விருதுநகர் மாவட்டத்தில் 27 கிரா மங்களில் உள்ள விவசாயிகளிடம் நேர டியாக ஆய்வு செய்துள்ளோம். தொழி லாளர்கள் மற்றும் தொழில் முனைவோ ரிடம் ஆய்வு செய்து விவசாயத்துறை யில், சிறுதொழில்களை பாதுகாப்ப தில், தொழிலாளர் நலனை பாதுகாப்ப தில் என்னென்ன மாற்றுக் கொள்கை களை நிறைவேற்றிட வேண்டுமென ஆய்வு அறிக்கை தயார் செய்து, அதை முன்வைத்து மக்கள் வாழ்வாதார கோரிக்கை மாநாடு நடத்துகிறோம். அந்த கோரிக்கைகளை ஒன்றிய, மாநில அரசுகள் நிறைவேற்றிட வேண்டு மென தொடர்ந்து வற்புறுத்துவோம்.
கடலில் கலந்த 250 டிஎம்சி நீர்
குறிப்பாக விருதுநகர் மாவட்டம் ஒரு வறண்ட பகுதி மாவட்டமாக உள் ளது. சிறுபகுதிதான் பாசனம் உள்ளது. எனவே, காவிரி-வைகை-குண்டாறு இணைப்புத் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். அதற்கான நிதி ஒதுக் கப்பட்டு அந்த திட்டம் தொடக்க நிலை யிலேயே உள்ளது. தொடங்கப்பட்ட அத்திட்டம் முழுவீச்சில் செயல்பட வில்லை. காவிரியில் இந்த ஆண்டு 250 டி.எம்.சி தண்ணீர் வீணாக கடலில் கலந்து விட்டது. அந்த 250 டிஎம்சி தண்ணீரை வைகை, குண்டாற்றில் விட்டால், வறண்ட மாவட்டமாக இருக் கிற விருதுநகர், இராமநாதபுரம், சிவ கங்கை மற்றும் மதுரை மாவட்டத்தில் ஒரு பகுதி ஆகியவை வளமான பகுதி யாக மாறும். பல நேரங்களில் இம் மாவட்டங்களில் குடிநீருக்கே மக்கள் அவதிப்படும் நிலை ஏற்படுகிறது. எனவே, இந்த திட்டத்திற்கு கூடுதலான நிதியை ஒதுக்கிட நடவடிக்கை வேண்டுமென வலியுறுத்துகிறோம்.
பட்டாசுத் தொழிலைக் காப்போம்
அதேபோல் விருதுநகர் மாவட்டத் தில் மிக முக்கியமான தொழிலாக இருப்பது பட்டாசுத் தொழில். அதற்கு பலவிதமான நெருக்கடிகளை ஒன்றிய அரசும், சுற்றுச்சூழல் ஆர்வலர் என்கிற பெயரிலும் கொடுத்து வருகின்றனர். சுற்றுச் சூழல் பாதிக்கிறது. இயற்கை யான காற்றை மாசுபடுத்துகிறது என தடை உத்தரவு அல்லது நடைமுறைக்கு சாத்தியமற்ற மாதிரி பட்டாசுகளைத் தயார் செய்யச் சொல்லி நிர்ப்பந்தம் செய்கின்றனர். சுற்றுச்சூழல் பிரச்சனையை மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி குறைத்து மதிப்பிடவில்லை. ஆனால், உலகம் முழுவதும் உள்ள அச்சுறுத்தல் என்ன வெனில் நிலக்கரியை பயன்படுத்தி செயல்படுகிற தொழிற்சாலைகளால் தான் சுற்றுச்சூழலுக்கு மிகப் பெரிய ஆபத்து ஏற்படுகிறது. அதிகமாக பயன் படுத்தப்படும் வாகனப்புகை காரண மாகவே சுற்றுச் சூழல் மாசுபடுகிறது. பட்டாசுகளை 365 நாட்களும் யாரும் வெடிப்பதில்லை. பண்டிகை காலங்க ளில் மட்டுமே பட்டாசு வெடிக்கும் பழக் கம் தான் உள்ளது. அதனால் சுற்றுச் சூழல் மாசுபடும் எனக் கூறுவது ஏற்பு டையதல்ல. ஏனெனில், பட்டாசு உற்பத்தியா ளர்கள் என்பவர்கள் சிறுகுறு உற்பத்தி யாளர்கள் தான். ஆனால், நிலக்கரியை பயன்படுத்தி சிமிண்ட், அனல் மின் நிலையங்கள் வைத்திருப்போர் அதானி, அம்பானி போன்ற பெரிய கார்பரேட் முதலாளிகள். கார்ப்பரேட் முதலாளிகள் மீது நடவடிக்கை எடுப்ப தற்கு பதிலாக சிறுகுறு தொழில்களை அழிக்கும் நோக்குடன் சுற்றுச்சூழலை காரணம் காட்டுகிறார்கள். கடந்த மூன்று நாட்களாக பர பரப்பாக பேசப்படும் முக்கியமான விஷ யம் என்னவெனில், பிபிசி அலுவல கத்தின் மீது வருமான வரித்துறை ரெய்டு நடத்தப்படுகிறது. இந்நிறுவனம், குஜராத்தில் நடை பெற்ற இனப்படுகொலையை அம்ப லப்படுத்தியதோடு மட்டுமல்லாமல், அதில் தற்போது பிரதமராக இருக்கும் மோடி நேரடியாக சம்பந்தப்பட்டுள்ளார் என குற்றம்சாட்டியுள்ளது. எனவே தான், அதற்கு பழிவாங்குவதாக இந்த ரெய்டு நடக்கிறது. அதானி ஊழலை வெளிப்படுத்திய ஹிண்டன் பர்க் நிறுவனம் இங்கு இல்லை. இங்கு இருந்தால் அதன் தலை வரை கைது செய்திருப்பார்கள். நல்ல வேளையாக அது அமெரிக்காவில் உள்ளது. அதானி ஊழலை நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரிக்க வேண்டுமென எதிர்க்கட்சித் தலைவர்கள் கோரிக்கை எழுப்பினால், எவ்வித பதிலும் பிர தமர் சொல்லவில்லை.
ஆளுநர் பதவி பாஜக தலைவர்களுக்கு ஆறுதல் பரிசா?
ஆளுநர்கள் புதிதாக நியமிக்கப் பட்டுள்ளனர். சிலர் மாற்றப்பட்டுள்ள னர். அதில் 3 பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்த வர்கள். தமிழிசை, எல்.கணேசன் ஏற்க னவே உள்ளனர். தற்போது சி.பி.ராதா கிருஷ்ணன் ஆளுநர். ஆளுநர் பதவி என்பது பாஜக தலை வர்களுக்கு ஆறுதல் பரிசு போல் ஆகி விட்டது. பாஜக தமிழகத்தில் வெற்றி பெற முடியாது. எனவே, இங்கு தலைமை தாங்குபவர்களுக்கு ஆளுநர் பதவி தருகின்றனர். ஆளுநர் பதவிக்கு பாஜக தலைவர்களைத் தவிர வேறு தகுதியானவர்கள் யாரும் இல்லையா? பொருளாதார நிபுணர்கள், வழக்கறி ஞர்கள் பல அறிஞர்கள் உள்ளனர். அவர்களையெல்லாம் விட்டு விட்டு பாஜக தலைவர்களையே ஏன் ஆளுந ராக நியமிக்கின்றீர்கள்?
ஈரோடு தேர்தல்
ஈரோடு கிழக்குத் தேர்தலில் அதி முக-பாஜக படுதோல்வி அடையும். டெபாசிட் வாங்குவதே சந்தேகம் என்ற சூழ்நிலையில், கடைசி நேரத்தில் தில்லு முல்லு செய்கிறது பாஜக என செய்தி வந்துள்ளது. அது நல்லதல்ல. தமிழ் நாட்டு மக்கள் அதை ஏற்கமாட்டார்கள்.
அமித்ஷா மீது
நடவடிக்கை எடுத்திடுக!
திரிபுராவில் சட்டமன்றத்தேர்தல் வாக்குப்பதிவு வியாழனன்று நடை பெற்றுள்ளது. ஆனால், உள்துறை அமைச்சர் அமித்ஷா புதன்கிழமை அதிகாரிகளை அழைத்து ஆலோச னைக் கூட்டம் நடத்துகிறார். பின்பு, எப்படி அமைதியான முறையில் நியாய மான முறையில் தேர்தல் நடக்கும். தேர்தல் விதிகள் அமித்ஷாவுக்கு பொருந்தாதா? தேர்தல் அறிவித்து விட்டால், அதி காரிகள் மக்களையே சந்திக்க கூடாது என விதி உள்ளது. எனவே, தேர்தல் விதிப்படி அமித்ஷா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
முதியோர் உதவித் தொகை
முதியோர் உதவித் தொகையை சில விதிமுறைகளை காரணம் காட்டி பெற்று வருபவர்களுக்கு நிறுத்தக் கூடாது. உண்மை என்னவெனில் ஒரு பகுதி அதிமுக ஆட்சி காலத்தில் அதன் பிரமுகர்கள் தங்களுக்கு வேண்டிய வர்களுக்கு முதியோர் உதவித் தொகை யை வழங்கியுள்ளனர். அதில் உண்மை உள்ளது. ஆனால், நிறுத்தி வைக்கப் பட்டுள்ள அனைவரும் அப்படியல்ல. எனவே, தகுதியானவர்களுக்கெல் லாம் முதியோர் உதவித் தொகையை யோ அல்லது மக்கள் பெறுகிற பிற சலுகைகளையோ மாநில அரசு தடுக்கக் கூடாது. ஏராளமான முதியோர் களுக்கு உதவித் தொகை கிடைக்காத நிலை உள்ளது. அதை விரிவு படுத்தி தகுதியானவர்களுக்கு வழங்க நட வடிக்கை எடுக்க வேண்டும். ஈரோடு மாவட்டத்தில் சிறுகுறு தொழில்கள் முழுவதும் அழிந்து போயுள்ளது. பருத்தி விலை உயர் வால் விசைத்தறி தொழில் முடங்கிப் போயுள்ளது. ஜவுளித் தொழில் மிக வும் பாதிக்கப்பட்டுள்ளது. அதற்கு முக்கிய காரணம், ஒன்றிய பாஜக அர சின் பொருளதாரக் கொள்கை தான். இது மக்களுக்கு நன்றாக தெரியும். பருத்தியை பொறுத்தமட்டில் மாநில அரசு அதில் தலையிட முடியாது. அதானி, பருத்தியை கொள்முதல் செய்து அதிகமான விலைக்கு வெளி நாடுகளுக்கு விற்கிறார். காட்டன் கார்ப்பரேசன் எனும் அரசு நிறுவனம் பருத்தியை கொள்முதல் செய்யக் கூடாது என கூறி விட்டனர். இதனால் உள்நாட்டில் தட்டுப்பாடு ஏற்பட்டு பருத்தி, நூல் விலை உயர்ந்து விட்டது. விசைத்தறி, ஜவுளித் தொழில் நைந்து போயுள்ளது. இதற்கு காரணம் பாஜக வும் மோடியும் தான். அப்படிப்பட்ட வர்களை அதிமுக தலையில் தூக்கிக் கொண்டு போய் வாக்கு கேட்டால் எப் படி மக்கள் வாக்களிப்பார்கள்?
பிரபாகரன் பற்றிய தகவல்
விடுதலைப் புலிகள் தலைவர் பிரபா கரன் உயிரோடு இருப்பார் என்பதில் முகாந்திரம் இருப்பதாக தெரிய வில்லை. வந்து விட்டால் பெரிய மாற்றம் ஏற்படப்போவதில்லை. ஆனால் இந்த அறிவிப்பு என்ன விளைவை ஏற் படுத்தும் என பார்க்க வேண்டும். இந்த அறிவிப்பு அங்கு வாழும் தமிழர்கள் மீது கூடுதலான தாக்குதல்களை கட்ட விழ்த்து விடும் என்ற அச்சம்தான் ஏற்படு கிறது. இலங்கை பொருளாதாரம் தள்ளாடி, கோத்தபய ராஜபக்சே ஓட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. தமிழ் மக்களை கொன்று குவிக்கவே பட் ஜெட்டில் 40 சதவீதத்தை ராணு வத்திற்கு செலவு செய்தனர். இனிமேல் அதை தொடர முடியாது என்ற முடி வுக்கு இலங்கை அரசு வந்துள்ளது. இவ்வாறு கே.பாலகிருஷ்ணன் கூறினார்.