வேலூர், ஜன. 17- பொங்கல் பண்டிகையின் ஒரு பகுதியான காணும் பொங்கலையொட்டி தமிழகம் முழுவது முள்ள சுற்றுலாத் தலங்கள், பொழுது போக்கு மையங்களில் செவ்வாயன்று (ஜன. 17) மக்கள் திரண்டனர். வேலூர் மாவட்டத்திலும் காணும் பொங்கலை பொதுமக்கள் உற்சாகமாகக் கொண்டாடினர். அதையொட்டி வேலூர் கோட்டைக்கு ஆயிர க்கணக்கானோர் குடும்பத்துடன் வந்திருந் தனர். மக்கள் வருகையையொட்டி கோட்டை நுழைவு வாயில் பகுதியில் கரும்பு, தர்பூசணி, குளிர்பானக் கடைகளும், குழந்தைகளுக்கான விளையாட்டு பொம்மை கடைகளும் அமைக் கப்பட்டிருந்தன. அதேபோல் அமிர்தியில் உள்ள வனப்பூங்கா, கோட்டை பூங்கா, தங்கக் கோவில் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு இடங்க ளில் உள்ள சுற்றுலாத் தலங்களிலும் கூட்டம் அலைமோதியது. தொடர்ந்து 4 நாட்கள் விடு முறை அளிக்கப்பட்டுள்ளதால் பல்வேறு பகுதி களிலிருந்து சுற்றுலாப் பயணிகள் தங்களது குடும்பத்தினருடனும், உறவினர்களுடனும் ஏலகிரி மலைக்கு வந்து மகிழ்ச்சியுடன் பொழுதை கொண்டாடினர்.