districts

img

வாழ்வில் உயர கல்வி தான் நமக்கு மிகப்பெரிய ஆயுதம்: டிஜிபி பேச்சு

வேலூர். மே 29 - வேலூர் தொழில்நுட்ப பல்கலைக் கழகத்தில் 2022 ஆம் ஆண்டு ஸ்டார்ஸ் தின விழா விஐடி வேந்தர் ஜி.விஸ்வநாதன் தலைமையில் நடைபெற்றது.  இந்த விழாவில் தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குனர் சைலேந்திரபாபு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். சென்னை மாவட்ட முதன்மை கல்வி அலு வலர் மார்ஸ், விஐடி. துணைத் தலைவர் சங்கர் விஸ்வநாதன்,  துணைவேந்தர் நாராயணன், பதிவாளர் சத்யநாராயணன், ஸ்டார்ஸ் திட்ட ஒருங்கிணைப்பாளர் மீனாட்சி மற்றும் முன்னாள் மாணவ மாணவியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் விஐடி வேந்தர் ஜி.விசு வநாதன் பேசுகையில் கிராமப்புற மாணவர் கள் அனைவருக்கும் உயர்கல்வி வழங்கும் திட்டத்தின் மூலம் 7,000 பேருக்கு இதுவரை ரூ 7 கோடியே 75 லட்ச ரூபாய் நிதி உதவி வழங்கி உள்ளதாக கூறினார். இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தின ராக தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் சைலேந்திர பாபு கலந்து கொண்டு பேசுகையில் மறைந்த நெல்சன் மண்டேலா உலகின் மிகப்பெரிய ஆயுதம் என்று கல்வியை கூறியிருக்கிறார். மாண வர்கள் உயர்ந்த நிலைமைக்கு வர கல்வி தான் நமக்கு மிகப்பெரிய ஆயுதம் என்றார். முன்னதாக ஸ்டார்ஸ் திட்டத்தின் கீழ் படித்த முன்னாள் மாணவர்கள் ரூபாய் மூன்று லட்சத்தை அனைவருக்கும் உயர் கல்வித் திட்டத்திற்காக வேலூர் தொழில்நுட்ப பல்கலைக் கழகத்தின் வேந்தர்  ஜி.விசுவநாதனிடம் வழங்கினர்.