districts

img

கொத்தங்குடி ஊராட்சிக்கு தானியங்கி சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் இயந்திரம் வழங்கிய ஓஎன்ஜிசி

மயிலாடுதுறை, ஜூன் 26 - மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார் கோவில் ஊராட்சி ஒன்றியம் கொத்தங் குடியில் ஓ.என்.ஜி.சி. நிறுவனம் சார்பாக,  விலையில்லா தானியங்கி இயந்திரம் மூலம் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் திட்டத்தை நிவேதா முருகன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார். கொத்தங்குடி ஊராட்சியில் உள்ள 600 குடும்பத்தினரும் பயன்பெறும் வகையில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்க ஓ.என்.ஜி.சி. நிறுவனத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதை தொ டர்ந்து ஓ.என்.ஜி.சி நிறுவனத்தின் தனி ஏ.டி.எம். கார்டு மூலம் 600 குடும்ப அட்டைதாரர்களுக்கு இயந்திரம் மூலம் குடிநீர் வழங்குவதற்காக ரூ.6 லட்சத்து 35 ஆயிரம் செலவில் இயந்திரம்  அமைக்கப்பட்டது. இதன் திறப்பு விழா கொத்தங்குடி ஊராட்சி  வேலம்புதுக்குடியில் நடைபெற்றது. காரைக் கால் ஓ.என்.ஜி.சி.யின் சொத்து மேலாளர் அனு ராக் தலைமை வகித்தார். ஊராட்சி மன்ற தலை வர் தம்புமோகன் வரவேற்றார். நிவேதா முருகன் எம்.எல்.ஏ. தனி ஏ.டிஎம்.கார்டு மூலம் தண்ணீர் வழங்கும் திட்டத்தை துவக்கி வைத்து பேசினார்.  இத்திட்டம் குறித்து காரைக்கால் ஓ.என்.ஜி.சி.  சொத்து மேலாளர் அனுராக் கூறுகையில், “இத்திட்டத்தின் மூலம் ஒரு நாளைக்கு 750  லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கப்ப டும். ஒரு குடும்பத்திற்கு ஒரு நாளைக்கு 25 லிட்டர் தண்ணீரை, நாங்கள் அளித்துள்ள எங்களின் ஏ.டி.எம். கார்டு மூலம் பெற்று கொள்ளலாம். தொடர்ந்து 3 ஆண்டுகள் எந்த  இடர்பாடும் தடையும் இல்லாமல் இந்த ஏ.டி.எம். இயந்திரம் தண்ணீர் வழங்கும். நாங்கள்  அதை கண்காணித்து கொண்டு இருப்போம் என்றார்.