மயிலாடுதுறை, மார்ச் 14- மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளி டம் அருகே பழையாறு மீன்பிடி துறை முகத்திலிருந்து புதுப்பட்டினம், புளியந் துறை, கோதண்டபுரம், நல்லூர், ஆச்சாள் புரம், தண்டேசநல்லூர், கொள்ளிடம் வழி யாக சிதம்பரம் மற்றும் சீர்காழி உள்ளிட்ட பகுதிகளுக்கு கடந்த பத்து வருடங்களுக்கு முன்பு நேரடியாகச் செல்ல முடியாத நிலை இருந்தது. இதற்குக் காரணம் புதுப்பட்டினத் திற்கும் புளியந்துறைக்கும் இடையே கிட்டி யணை உப்பனாறு தான். தற்போது ஆற்றின் குறுக்கே பாலம் கட்டப் பட்டதால் புதுப்பட்டினத்திற்கும் புளியந் துறைக்கும் இடையே உள்ள தூரம் 500 மீட்ட ராக சுருங்கிவிட்டது. இந்தப் பாலத்தின் வழியே வாகனப் போக்குவரத்து நடைபெற் றாலும் பேருந்துகள் இயக்கப்படவில்லை புளியந்துறை கிராமத்திலிருந்து புதுப் பட்டினத்தில் உள்ள மேல்நிலை பள்ளிக்கு செல்லும் மாணவர்கள், பழையாறு துறை முகத்துக்கு செல்லும் தொழிலாளர்கள் சைக் கிள், இருசக்கர வாகனங்களை பயன்படுத்து கின்றனர். பலர் நடந்து செல்கின்றனர். பழையாறு துறைமுகத்திலிருந்து புதுப்பட்டினம் மற்றும் புளியந்துறை, கோதண்டபுரம் ஆச்சாள்புரம் கொள்ளிடம் வழியாக சீர்காழி மற்றும் சிதம்பரம் ஆகிய பகுதிகளுக்கு அரசுப் பேருந்து இயக்கப் பட்டால் 5-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள், தொழிலாளர்கள், பள்ளி-கல்லூரிகளைச் மாணவர்கள் பயன டைவர். கிராம மக்களின் கோரிக்கையை நிறைவேற்றுமா மாவட்ட நிர்வாகம்?