districts

img

வீணாகும் மழைநீரை சேகரிக்க புதிய கால்வாய் அமைக்க வேண்டும் ஒன்றிய மாநாட்டில் தீர்மானம்

திருச்சிராப்பள்ளி, நவ.23- அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கம் முசிறி ஒன்றிய 10-ஆவது மாநாடு பேரூர் கிராமத்தில் தோழர் கே.செல்லம்மாள் நினைவரங்கில் சங்க துணைத் தலைவர் கே.ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற் றது. மாநாட்டை சங்க மாவட் டக்குழு உறுப்பினர் ரா. முத்துக்குமார் துவக்கி வைத்தார். ஒன்றியச் செய லாளர் அ.முருகானந்தம் வேலையறிக்கை வைத்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முசிறி ஒன்றியச் செய லாளர் டி.பி.நல்லுசாமி, வாலிபர் சங்க ஒன்றியச் செய லாளர் வி.சத்தியராஜ், தமிழ்  நாடு விவசாயிகள் சங்க ஒன்  றியச் செயலாளர் கே.பெரிய சாமி ஆகியோர் வாழ்த்திப் பேசினர். மாவட்ட செயலா ளர் அ.பழநிசாமி நிறைவுரை யாற்றினார். பிரபு நன்றி கூறி னார்.  தலைவராக முருகானந் தம், செயலாளராக அசோக், பொருளாளராக ராமச்சந்தி ரன், துணை தலைவராக பிரபு, துணை செயலாளராக பரிமளா உள்பட 17 பேர் கொண்ட ஒன்றியக்குழு தேர்வு செய்யப்பட்டது.  முசிறி ஒன்றியம் திருத் தலையூர், நெய்வேலி ஊராட்சியில் உள்ள ஏரிகள் மழை வெள்ளப் பெருக்கால் நிரம்பி ஒரு மாத காலமாக வழிந்து ஓடுகிறது. இந்த நீரை திருத்தியமலை ஏரிக்கு திருப்பினால் 10க்கும் மேற்  பட்ட ஊராட்சிகள் நேரடியாக பயனடையும். எனவே வீணா கும் மழைநீரை சேமித்து புதிய கால்வாய்கள் அமைப்பதன் மூலம் விவசாயமும் விவ சாயிகளும் வாழ்வதற்கான நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொள்ள வேண்டும். முசிறி ஒன்றியம்  தண்டை புத்தூர் ஆரம்ப சுகா தார நிலையத்தை அரசு மருத்துவமனையாக தரம்  உயர்த்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மா னங்கள் நிறைவேற்றப்பட்டன.