districts

img

வாழ்வாதாரக் கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி சத்துணவு ஊழியர்கள் தர்ணா போராட்டம்

திருச்சிராப்பள்ளி, ஆக.31 -  காலை உணவுத் திட்டத்தை  தனியாருக்கு தாரை வார்ப்பதை  நிறுத்திவிட்டு உரிய கட்டமைப்பு  வசதியுடன் சத்துணவு ஊழியர் களிடமே வழங்க வேண்டும். முழு நேர அரசு ஊழியராக அறிவித்து  வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். ஓய்வு பெறும் போது அமைப்பாளர்க ளுக்கு ரூ.5 லட்சம், சமையல் உதவி யாளர்களுக்கு ரூ.3 லட்சம் பணிக் கொடையாக வழங்க வேண்டும். காலிப்பணியிடங்களை உடனடி யாக நிரப்ப வேண்டும். உணவு மானியத் தொகையை  குழந்தை ஒன்றிற்கு ரூ.5 உயர்த்தி வழங்க வேண்டும். சத்துணவு பிரி விற்கு கணினி ஆபரேட்டரை நியமிக்க வேண்டும். எரிவாயு சிலிண்டரை நேரடியாக மையத்தி ற்கு வழங்க வேண்டும். சத்துணவு திட்டத்தை தனியாருக்கு தாரை வார்க்கும் போக்கை அரசு கைவிட  வேண்டும். சத்துணவு திட்டத்தில்  பணிபுரியும் பெண் ஊழியர்களுக் கும் மகப்பேறு விடுப்பு சம்பளத்து டன் 12 மாதம் வழங்க வேண்டும்  என்பன உள்ளிட்ட கோரிக்கை களை வலியுறுத்தி செவ்வாய்க் கிழமை தமிழ்நாடு சத்துணவு ஊழி யர் சங்கத்தினர் மாலை நேர தர்ணா போராட்டம் நடத்தினர். திருச்சி மத்திய பேருந்து நிலை யம் அருகில் நடைபெற்ற போராட்டத் திற்கு மாவட்ட தலைவர் சத்திய வாணி தலைமை வகித்தார். போராட்டத்தை தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் பழனிச்சாமி துவக்கி வைத்தார். சங்க மாவட்ட செயலாளர் அல்போ ன்ஸா, அரசு ஊழியர் சங்க மாவட்ட  பொருளாளர் சுந்தரராஜன், சிஐடியு  மாநகர் மாவட்ட செயலாளர் ரெங்க ராஜன், அனைத்துத் துறை ஓய்வூதி யர் சங்க மாவட்ட துணைத்தலைவர் சிராஜூதீன் ஆகியோர் பேசினர். சங்க மாநில துணைத்தலைவர் பெரியசாமி சிறப்புரையாற்றினார். அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் பால்பாண்டி நிறைவுரை யாற்றினார்
புதுக்கோட்டை
புதுக்கோட்டை அண்ணா சிலை அருகே நடைபெற்ற போராட்டத்திற்கு தமிழ்நாடு சத்து ணவு ஊழியர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் பெ.அன்பு தலைமை வகித்தார். கோரிக்கைகளை விளக்கி மாவட்டச் செயலாளர் எஸ்.சீதாலெட்சுமி பேசினார். சிஐடியு மாவட்டச் செயலாளர் ஏ. ஸ்ரீதர், அரசு ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் ஆர்.ரெங்க சாமி, முதல்நிலை கால்நடை மேற் பார்வையாளர் சங்க மாநில  பொதுச் செயலாளர் கே.குமரேசன்,  சங்கத்தின் முன்னாள் மாநில செய லாளர் கு.சத்தி, மாவட்ட துணைத் தலைவர் ஏ.லெட்சுமணன், அறி வியல் இயக்க மாநிலக்குழு உறுப்பி னர் அ.மணவாளன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். போராட் டத்தை நிறைவு செய்து சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் அ. மலர்விழி உரையாற்றினார்.
தஞ்சாவூர்
தஞ்சாவூர் பனகல் கட்டிடம்  முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத் துக்கு சங்கத்தின் மாவட்ட தலை வர் மு.வீராச்சாமி தலைமை வகித் தார். ஆர்ப்பாட்டத்தை தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்டச்  செயலாளர் ஆர்.ரெங்கசாமி துவக்கி வைத்தார். கோரிக்கைகளை வலி யுறுத்தி தமிழ்நாடு சத்துணவு ஊழி யர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் தி.ரவிச்சந்திரன் உரையாற்றினார். அரசு ஊழியர் சங்க மாநிலச் செய லாளர் எஸ்.ஹேமலதா நிறைவு ரையாற்றினார்.