districts

img

மணமேல்குடியில் பள்ளிமேலாண்மைக் குழு தன்னார்வலர்களுக்கான விழிப்புணர்வு பயிற்சி

அறந்தாங்கி, மார்ச்.10- மணமேல்குடி வட்டார வள மையத்தில் பள்ளிமேலான்மைக் குழு உறுப்பினர்க ளுக்கான பயிற்சி மற்றும் தன்னார்வலர்க ளுக்கான விழிப்புணர்வு பயிற்சி தொடங்கியது. புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி வட்டார வள மையத்திற்குட்பட்ட கட்டு மாவடி அரசு மேல்நிலைப்பள்ளி, பெரு மருதூர் அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் அம்பலவாணநேந்தல் அரசு மேல்நிலைப் பள்ளி ஆகிய குறுவள மையங்களில் முதற்க கட்ட பயிற்சி கட்டுமாவடி அரசு மேல்நிலைப் பள்ளியில் தலைமையாசிரியர் இராஜேந்தி ரன்  தலைமையில் தொடங்கியது. வட்டார வளமைய மேற்பார்வையாளர் (பொ) சிவ யோகம் முன்னிலை வகித்தார். பயிற்சியில் கல்வி உரிமைச் சட்டம் 2009-ல் கூறியுள்ளபடி, பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்களுக்கு பள்ளி மேலாண் மைக்குழுவின் முக்கியத்துவம் மற்றும் அதன் செயல்பாடுகள் பற்றியும் தெரி விக்கப்பட்டது. மேலாண்மை குழு உறுப்பி னர்களுக்கு குழந்தை உரிமைகள் பற்றிய ஆழமான புரிதல் உருவாக்கப்பட்டது. மேலும் பள்ளி மேம்பாட்டுத் திட்டம் தயாரித்து‌ செயல்படுத்துவதில் பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர்கள் பங்கு பற்றியும் தெளிவாக விவரிக்கப்பட்டது. இப்பயிற்சியில் கருத்தாளர்களாக ஆசிரிய பயிற்றுநர்கள் முத்துராமன், வேல் சாமி, அங்கயற்கண்ணி, தலைமை ஆசிரியர் மதியழகன், ஆசிரியர்கள் மலர்க்கொடி, லதா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.