திருச்சிராப்பள்ளி, டிச.18 - அகில இந்திய விவசாயத் தொழி லாளர்கள் சங்க திருச்சி புறநகர் மாவட்ட 10 ஆவது மாநாடு வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் தா.பேட்டை யில் நடைபெற்றது. மாநாட்டின் முதல் நாளான வெள்ளிக் கிழமை மாலை தா.பேட்டை கடைவீதி யில் நடைபெற்ற மாநாட்டு பொதுக் கூட்டத்திற்கு சங்க மாவட்ட துணை தலைவர் வீரவிஜயன் தலைமை வகித் தார். சங்க மாநில செயலாளரும், சட்ட மன்ற உறுப்பினருமான சின்ன துரை, மாநில பொதுச் செயலாளர் அமிர்தலிங்கம், மாவட்ட செயலா ளர் பழநிசாமி, மாவட்ட தலைவர் சுப்பிரமணியன், மாவட்ட பொரு ளாளர் சந்திரன், வரவேற்புகுழு தலை வர் சுப்பிரமணியன் ஆகியோர் சிறப்பு ரையாற்றினர். மாநாட்டின் 2 ஆம் நாளான சனிக்கிழமை நடைபெற்ற பிரதிநிதிகள் மாநாட்டிற்கு மாவட்ட தலைவர் சுப்பிர மணியன், ஆர்க்கினேஸ்மேரி ஆகி யோர் தலைமை வகித்தனர். தா. பேட்டை கடைவீதியிலிருந்து கொடி, நினைவு சுடர் ஊர்வலம் வரவேற்பு குழு பொருளாளர் பாண்டியன் தலை மையில் நடைபெற்றது. பிரதிநிதிகள் மாநாட்டு அரங்கில் சங்கத்தின் முன்னாள் மத்தியக் குழு உறுப்பினர் செல்லம்மாள் நினைவாக, திருவெறும்பூர் அனந்த நம்பியார் இல்லத்திலிருந்து மாவட்ட துணைத் தலைவர் தெய்வநிதி தலைமையில் கொண்டு வரப்பட்ட செங்கொடியை சட்டமன்ற உறுப்பினர் சின்னதுரை பெற்றுக் கொண்டார். தா.பேட்டை தோழர் கிருஷ்ணமூர்த்தி நினைவாக தோழர் முருகேசன் தலைமையில் கொண்டு வரப்பட்ட கொடி மரத்தை மாநிலக் குழு உறுப்பினர் சந்திரன் பெற்றுக் கொண்டார். தோழர் சேகர் தலைமையில் கொண்டு வரப்பட்ட முன்னாள் ஒன்றிய பெருந்தலைவர் தோழர் பி.தங்கவேலு நினைவு சுடரை பொதுச் செயலாளர் அமிர்தலிங்கம் பெற்று கொண்டார். மாநாட்டு கொடியை மாவட்டக் குழு உறுப்பினர் முருகேசன் ஏற்றினார்.
அஞ்சலி தீர்மானத்தை மாவட்ட துணை செயலாளர் கண்ணன் வாசித்தார். வர வேற்பு குழு தலைவர் சுப்பிரமணியன் வரவேற்றார். கந்தர்வகோட்டை சட்ட மன்ற உறுப்பினர் சின்னதுரை துவக்கவு ரையாற்றினார். வேலை அறிக்கையை மாவட்ட செயலாளர் பழநிசாமி வாசித் தார். மாநாட்டில், கடந்த ஐந்தாண்டு கால ஆட்சியில் பட்டியல் மற்றும் பூர்வகுடி மக்களின் சிறப்பு உட்கூறு திட்டத்திற் காக ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதியை செலவழிக்காமல் திரும்ப எடுத்துக் கொண்ட ரூ.927 கோடியை உடனே பட்டியல் மற்றும் பூர்வக்குடி மக்களின் நலனுக்கும், சிறப்பு திட்டங்களுக்கும் ஒதுக்கீடு செய்ய வேண்டும். இதனை முறைப்படுத்திட கண்காணிப்பு ஆணையம் அமைக்க வேண்டும். திட்டங் களுக்கு செலவழிக்காமல் இருந்த ஆதி திராவிட நலத்துறை அதிகாரிகள் மீது துறைரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். நகர்ப்புற வேலை வாய்ப்பு திட்டத் திற்கு ரூ.1000 கோடி நிதி ஒதுக்கீடு செய்து அனைத்து பேரூராட்சி, நகராட்சி களிலும் நகர்ப்புற வேலைவாய்ப்பு திட்டத்தை அமல்படுத்த வேண்டும். முசிறி வட்டம் தாத்தயங்கார்பேட்டை பகுதியில் உள்ள மகாதேவி ஆற்றுக்கு, புளியஞ்சோலை உபரி நீரை திருப்பி விடும் திட்டம் நீண்ட காலமாக கிடப்பில் உள்ளது. இத்திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும். மணப்பாறை வட்டம் பொன்னனி ஆற்றுக்கு காவிரி ஆற்றின் உபரி நீரை திருப்பிவிடும் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும்.
முசிறி வட்டம் திருத்தலையூர் ஏரிக்கு வரத்து வாய்க்கால் வெட்ட வேண்டும். 60 வயது முதிர்ந்த மூத்த குடிமக்கள் அனைவருக்கும் நிபந்த னையின்றி ஓய்வூதியம் வழங்க வேண்டும். தாலிக்கு தங்கம் திட்டத்தை முழுமையாக அமலாக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன. மாவட்டத்தின் புதிய தலைவராக ஜெ.சுப்பிரமணியன், செயலாளராக அ.பழநிசாமி, பொருளாளராக எம்.கண்ணன், துணைத் தலைவர்களாக எஸ்.தெய்வநீதி, எம்.வீரவிஜயன், துணை செயலாளர்களாக இரா.முத்து குமார், ஆர்.செல்வம் உள்பட 25 பேர் புதிய மாவட்டக் குழுவுக்கும், 20 பேர் மாநில மாநாட்டு பிரதிநிதிகளும் தேர்வு செய்யப்பட்டனர். மாநாட்டை நிறைவு செய்து மாநில பொதுச் செயலாளர் அமிர்தலிங்கம் பேசினார். வரவேற்பு குழு செயலாளர் வீரவிஜயன் நன்றி கூறினார்.