மயிலாடுதுறை, மார்ச் 11- மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி வட்டம், கடக்கம் ஊராட்சியில் உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு, தரங்கம்பாடி வட்ட வழங்கல் துறை யின் சார்பில் மக்கள் குறைதீர் முகாம் நடைபெற்றது. முகாமிற்கு தரங்கம்பாடி வட்ட வழங்கல் அலுவலர் விஜயகுமார் தலைமை வகித்தார். வட்ட வழங்கல் துறை ஆய்வாளர் மரியஜோசப் ராஜ் முன்னிலை வகித்தார். கடக்கம் ஊராட்சி மன்ற தலைவர் சதீஷ் வரவேற்றார். முகாமில், குடும்ப அட்டையில் பெயர் நீக்குதல், பெயர் சேர்த்தல், முகவரி மாற்றம், செல்போன் எண் மாற்றம் ஆகிய தொடர்பாக 52 மனுக்கள் பொதுமக்களிடம் பெறப் பட்டன.