districts

img

கொள்ளிடம் மேலணை பாலம் திறப்பு: ஜூன் 26 முதல்வர் திருச்சி வருகை

திருச்சிராப்பள்ளி, ஜூன் 17- திருச்சி முக்கொம்பு மேலணையில் கொள்ளிடம் ஆற்றில் புதிதாக கட்டப் பட்டு வரும் தடுப்பணை மற்றும் புதிய பாலத்திற்கான பணிகளை தமிழக நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு வெள்ளியன்று ஆய்வு செய்தார்.  பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது : திருச்சி முக்கொம்பு கொள்ளிடம் ஆற்றில் ரூ.387.60 கோடி மதிப்பீட்டில புதிய பாலம் கட்டப்பட்டு வருகிறது. ஜூன் 26-ஆம் தேதி தமிழக முதல்வர் திருச்சி வருகை தந்து புதிதாக கட்டப்பட்ட முக்கொம்பு கொள்ளிடம் மேலணை பாலத்தை திறந்து வைக்கிறார். திருச்சியில் புதிய காவிரி பாலம் கட்ட ஏற்கனவே ரூ.90 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு இருந்தது. தற்போது ரூ.130 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. திருச்சி நகரின் காவிரி ஆற்றில் புதிய பாலம் மற்றும் எக்பிரஸ் எலிவேட்டர் வே உள்ளிட்ட திட்டங்கள் விரைவில் துவக்கப்படும் என தெரிவித்தார்.  ஆய்வின்போது. மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார், மாநகராட்சி மேயர் அன்பழகன் எம்எல்ஏக்கள் மற்றும் அரசு அதிகாரிகள் உடனிருந்தனர்.