districts

img

கல்மந்தை காலனி அடுக்குமாடி குடியிருப்பு வீடுகளை உடனடியாக வழங்க வேண்டும்

 திருச்சிராப்பள்ளி, ஏப்.11- திருச்சி மாநகராட்சி 17 வது வார்டுக்கு உட்பட்ட கல்மந்தை காலனி பகுதியில் அரசு சார்பில் 60 ஆண்டுகளுக்கு முன்பு குடி யிருப்புகள் கட்டித் தரப்பட்டன. அதன் பிறகு அந்த வீடுகள் பழுத டைந்ததை தொடர்ந்து, அந்த பகு தியில் குடிசை மற்றும் ஓட்டு வீடு கள் அமைத்து மக்கள் குடியிருக் கின்றனர். இந்நிலையில், பழுதடைந்த அந்த வீடுகள் அனைத்தையும் அகற்றி நகர்ப்புற வாழ்விட மேம் பாட்டு வாரியத்தின் சார்பில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டி வழங்கப்படும் எனக் கூறி, கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு பணி துவங்கப்பட்டது. தற்போது அடுக்குமாடி குடி யிருப்பு வீடுகள் கட்டி முடிக்கப் பட்டுள்ளன. இந்நிலையில் கல் மந்தை காலனி பகுதியில் வசித்த மக்களுக்கே குடியிருப்பினை வழங்கிட வேண்டும். வாடகை வீட்  டில் குடியிருந்து வரக்கூடிய சூழ லில், உடனடியாக வீடுகளை வழங்கிட கேட்டு பலமுறை அதிகாரி களை சந்தித்து கோரிக்கை விடுத்  தும், வீடுகளை வழங்காத நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு அதிகாரி களை கண்டித்தும் செவ்வாயன்று போராட்டம் நடைபெற்றது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் தலைமையில் கல்மந்தை  காலனி மக்கள் போராட்டம் குடி யேறும் போராட்டத்தில் ஈடுபட்ட னர். போராட்டத்தையொட்டி சம்  பவ இடத்திற்கு வந்த காவல்துறை உதவி ஆணையர் மற்றும் நகர்புற வாழ்விட மேம்பாட்டு துறையின்  உயர் அதிகாரிகள் பேச்சுவார்த்தை  நடத்தினர். இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் ஆர்.ராஜா, மாவட்ட செயற்குழு உறுப்பினர் கோ.வெற்றிச்செல் வன், பகுதி செயலாளர் பா. லெனின், பகுதிக்குழு உறுப்பினர் ராமர், கிளைச் செயலாளர் மகா லிங்கம் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். பேச்சுவார்த்தையில் உரிய பயனாளிகளின் பெயர் பட்டியல் செவ்வாயன்று மாலைக்குள் வெளியிடுவது என உத்தரவாதம் அளிக்கப்பட்டது. இதையடுத்து குடியேறும் போராட்டம் ஆர்ப் பாட்டமாக நடைபெற்றது.