districts

img

சுதந்திர தின அமுதப் பெருவிழா: மாரத்தான் விழிப்புணர்வு ஓட்டம்

திருச்சிராப்பள்ளி, ஏப்.1 - திருச்சி திருவள்ளுவர் பேருந்து நிலையம்  அருகில் உள்ள வேதாரண்யம் உப்பு சத்தியா கிரகம் நினைவுத் தூண் அருகில் இருந்து 75  ஆவது சுதந்திர தின அமுதப் பெருவிழாவை யொட்டி விளையாட்டு வீரர்கள், மாணவ-மாணவிகள், அலுவலர்கள் உள்ளிட்ட பொது மக்கள் பங்கேற்ற மாரத்தான் விழிப்புணர்வு ஓட்டத்தினை மாவட்ட ஆட்சியர் சிவராசு வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்து ஓட்டத் தில் பங்கேற்றார்.  முன்னதாக வேதாரண்யம் உப்பு சத்தியா கிரகம் நினைவுத்தூணில் உள்ள மகாத்மா காந்தியடிகள், பெருந்தலைவர் காமராஜர், மூதறிஞர் இராஜாஜி ஆகியோரின் உருச்சி லைகளுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தி னர். இந்நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவ லர் பழனிகுமார், வருவாய் கோட்டாட்சியர் தவச்செல்வம், மாவட்ட விளையாட்டு அலுவ லர் ஞானசுகந்தி, வட்டாட்சியர் சேக் முஜிப் உட்பட பலர் கலந்து கொண்டனர்.