districts

இஸ்லாமியர் மகளிர் உதவும் சங்கத்தில் உறுப்பினராக சேர விண்ணப்பங்கள் வரவேற்பு

மயிலாடுதுறை, மார்ச் 12 - இஸ்லாமியர் மகளிர் உதவும் சங்கத்தில் உறுப்பினராக சேர விண்ணப்பங்கள் வரவேற் கப்படுவதாக மயிலாடுதுறை மாவட்ட ஆட்சி யர் விடுத்துள்ள செய்தி குறிப்பில் தெரி வித்துள்ளார். மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள முஸ்லீம் சமுதாயத்தை சார்ந்த ஆதரவற்ற, கணவரால் கைவிடப்பட்ட மற்றும் வயதான பெண்களுக்கு உதவி புரியவும் மற்றும் சுய தொழில் மூலம் வருமானம் பெற வழிவகை  செய்திடவும், திறன் வளர்ப்பு பயிற்சி அளித்தி டவும், “மயிலாடுதுறை மாவட்ட முஸ்லீம் மக ளிர் உதவும் சங்கம்” அமைக்கப்படவுள்ளது. மேற்படி முஸ்லீம் மகளிர் உதவும் சங்கத் தினை நல்ல முறையில் செயல்படுத்திட மாவட்ட ஆட்சியர் தலைவராகவும், மகளிர் திட்ட இயக்குநர் துணைத் தலைவராகவும், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறு பான்மையினர் நல அலுவலரை பொருளாள ராகவும் கொண்ட குழு அரசின் வழிகாட்டுத லின் படி அமைக்கப்பட உள்ளது.   இக்குழுவில் அலுவல் சாரா உறுப்பினர்க ளாக முஸ்லீம் மதத்தை சேர்ந்த ஒரு கௌரவ செயலாளர், இரண்டு கௌரவ இணைச்  செயலாளர்கள் மற்றும் மூன்று உறுப்பினர் கள் நியமிக்கப்பட உள்ளனர். இப்பொறுப் பிற்கு மயிலாடுதுறை மாவட்டத்தில் வசிக்கும்  முஸ்லீம்களில் சமூக பணிக்கு எவ்வித புகார் களுக்கும் இடமின்றி ஆர்வமுடன் செயல்படு பவர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இவர்கள் மீது எவ்வித குற்றவியல் நடவ டிக்கைளும், நீதிமன்ற வழக்குகளும் நிலுவை யில் இருக்கக் கூடாது. விருப்பமுள்ளவர்கள் தங்கள் முழு விபரம், கல்வி தகுதி மற்றும்  புகைப்படத்துடன் கூடிய விண்ணப்பத்தினை மார்ச் 20 ஆம் தேதிக்குள் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் 3 ஆம்  தளத்தில் அமைந்துள்ள மாவட்ட பிற்படுத்தப் பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலு வலகத்தில் விண்ணப்பிக்கலாம் என மயிலாடு துறை மாவட்ட ஆட்சியர் இரா.லலிதா தெரி வித்துள்ளார்.