districts

img

மயிலாடுதுறை நகராட்சி முன்பு நடந்த போராட்டத்தில் காவல்துறை அத்துமீறல்

மயிலாடுதுறை ஏப்.10- மயிலாடுதுறை நகராட்சி முன்பு மாப் படுகை கிட்டப்பா பாலம் அருகே கட்டுமான பணி துவங்கி பாதியிலேயே நிற்கும் கருமாதி  மண்டப பணியை மீண்டும் துவக்கக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி  மற்றும் பொதுமக்கள் சார்பில் முற்றுகை போராட்டம் திங்களன்று நடைபெற்றது.  இந்நிலையில், கடும் வெயிலிலும் போராட்டம் நடத்துவதை கண்டு கொள்ளாமல், நகராட்சி அலுவலகம் முன் பகுதியில் தடுப்புகளை அமைத்து  காவல்துறை அத்துமீறி அடாவடித்தன மாக நடந்து கொண்டனர். இதனால், போராட்டக்காரர்கள் தடுப்புகளை தூக்கி  எறிந்தனர். அதன் பின்னரே பேச்சு வார்த்தைக்கு அதிகாரிகள் வந்து ஒரு வாரத்திற்குள் பணி துவங்கப்படும் என்ற உத்தரவாதத்தை அளித்தனர்.