பாபநாசம், பிப்.18- அய்யம்பேட்டை அருகே, கோவிந்த நாட்டுச்சேரி ஊராட்சி புத்தூர், பட்டுக்குடி, நாயக்கர் பேட்டை சமுதாயக் கூடத்தில் ஆயுர்வேதா, சித்தா மருத்துவ முகாம் நடைபெற்றது. கும்பகோணம் சஞ்சுலா ஆயுர்வேத மருத்துவமனை மருத்துவர்கள் கமலக்கண்ணன், கிருஷ்ணன் ஆகியோர் 150-க்கும் மேற்பட்டவர்களுக்கு முழு உடற்பரிசோதனை மேற்கொண்டு சிகிச்சையளித்தனர். இதில் முன்னாள் ஊராட்சித் தலைவர் ஜெய்சங்கர், முன்னாள் துணைத் தலைவர் இந்திரா காந்தி, முன்னாள் வார்டு உறுப்பினர் துரை, ஊராட்சி செயலர் முருகையன் உட்பட பலர் பங்கேற்றனர்.