மயிலாடுதுறை, மே 28 - வறுமையில் வாடுகிற இலங்கை மக்களை பாதுகாக்க ஒவ்வொரு கிராமங்களிலும் வீடு, வீடாகச் சென்று உண்டியல்களில் நிதி திரட்டும் மார்க்சிஸ்ட் கட்சியினருக்கு பொதுமக்கள் உற்சாகமாக வரவேற்று நிதியளித்து வருகின்றனர். தரங்கம்பாடி ஒன்றியச் செயலாளர் ஏ.ரவிச்சந்திரன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் டி.சிம்சன், மாவட்டக்குழு உறுப்பினர் காபிரியேல் ஆகியோர் தலைமையிலான 3 குழுக்களின் நிதி சேர்ப்பு இயக்கத்தை கட்சியின் மாவட்ட செயலாளர் பி.சீனிவாசன் வெள்ளிக்கிழமை துவக்கி வைத்து நிதி சேகரிப்பில் ஈடுபட்டார். திருவிளையாட்டம், கொத்தங்குடி, பனங்குடி, வேலம்புதுக்குடி ஆகிய கிராமங்களில் நடந்த உண்டியல் வசூலின்போது, திருவிளையாட்டம் கிராமத்தில் தோழர்களை கண்ட ஜெப்ரி என்ற சிறுவன், தன்னிடம் இருந்த பணத்தை ஆர்வமுடன் வந்து உண்டியலில் போட்டது அனைவரையும் நெகிழ்ச்சியுற செய்தது.