districts

img

சிபிஎம் வேட்பாளர் தீவிர வாக்கு சேகரிப்பு

திருச்சிராப்பள்ளி, பிப்.17- திருச்சி மாவட்டம் சிறுகமணி பேரூராட்சி 5-வது வார்டு உறுப்பி னர் பதவிக்கு திமுக தலைமையி லான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் கே.மீனா வார்டுக் குட்பட்ட பகுதியில் வியாழனன்று இறுதி கட்ட பிரச்சாரம் மேற் கொண்டார்.  பிரச்சாரத்தின் போது, மக்க ளுக்கு நகர்ப்புற வேலை திட்டத்தில் வேலை வாய்ப்பும், சட்ட கூலி பெறவும், காவிரி கூட்டு குடிநீரை காலை மற்றும் மாலை வேளை களில் தங்குதடையின்றி வழங்கிட வும், சாக்கடை, கழிவுநீர் தேங்கா மலும், குப்பைகளை அகற்றி தூய்மை, சுகாதாரத்தை பேணி காக்கவும், அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மேம்படவும், ஆண், பெண் இருபாலர்களுக்கும்  குளியல் அறையுடன் கூடிய சுகாதார வளாகம் அமைக்கவும், வீடு இல்லாதவர்களுக்கு வீட்டு மனையும், குடியிருப்பு மனைக ளுக்கு பட்டா பெற்றுத்தரவும்,  விவசாய பயன்பாட்டிற்கான புதுரோட்டை மெயின் சாலையு டன் இணைத்திடவும். சிறுகமணி கிழக்கு கிராம நிர்வாக அலுவ லகத்திற்கு அரசின் மூலம் நிதி ஒதுக்கி தனி அலுவலகம் அமைத்தி டவும். மாற்றுத்திறனாளிகள், முதியோர், கர்ப்பிணிகள் மற்றும் பெண் குழந்தைகளுக்கான குறை தீர் கூட்டம் மாதம் ஒருமுறை நடத்திடவும். வேலை வாய்ப்புக் கான இலவச பயிற்சி மையம் அமைத்திடவும் பாடுபடுவேன் என்றார்.  வாக்கு சேகரிப்பில், திமுக ஸ்ரீரங்கம் சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டி, ஒன்றிய சேர்மேன் துரைராஜ், திமுக ஒன்றிய செய லாளர் கதிர்வேல், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய செயலா ளர் வினோத்மணி மற்றும் கூட்டணி  கட்சியினர் கலந்து கொண்டனர்.