சீர்காழி, மார்ச்.25- மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே உள்ள அளக்குடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் தேசிய அளவிலான குழந்தைகளுக்குரிய உயரம் மற்றும் எடை அளவிட்டு ஆரோக்கியமான குழந்தைகளை கண்டறியும் முகாம் நடைபெற்றது. முகாமை ஊராட்சி மன்ற தலைவர் சாந்தினிரமேஷ் துவக்கி வைத்தார். பள்ளியின் தலைமை ஆசிரியர் பாலு முன்னிலை வகித்தார். ஒருங்கிணைந்த வட்டார குழந்தை வளர்ச்சித் திட்ட அலுவலர் சாந்தி கலந்து கொண்டார். முகாமில் குழந்தைகளுக்கு எடை, உயரம் மற்றும் ஆரோக்கியம் குறித்து பரிசோதனை செய்யப்பட்டது. மேற்பார்வையாளர் நிலை1 விஜயா, வட்டார துணை ஒருங்கிணைப்பாளர் பிரியா, செவிலியர் இந்திரா, அங்கன்வாடி பணியாளர்கள் ராசாத்தி, கயல்விழி, விஜயா, பிரேமா, புவனா, சந்தானலட்சுமி, இந்திராதேவி, விஐயலட்சுமி ஆசிரியர்கள் சந்திரன், கணேசன், சுந்தரி, ராஜேஷ் குமார் மற்றும் பெண்கள் குழந்தைகள் கலந்து கொண்டனர்.