மயிலாடுதுறை, டிச.12- மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடியில் அமைக்கப்பட்டு வரும் மீன் பீடித் துறைமுகத்தில் மாண்டஸ் புயல் சீற்றத்தால் தூண் டில் வளைவுகளில் ஆங் காங்கே விரிசல் ஏற்பட்டு சேதமடைந்தது. இந்நிலையில் சேதமடைந்த பகுதிகளை பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா எம்.முருகன் ஆய்வு செய்தார். மேலும் உடனடி யாக சீரமைப்பு பணிகளை தரமாக செய்திட மீன்வளத்துறை அதிகாரி களுக்கு உத்தரவிட்டார். ஆய்வின் போது, செம்பனார் கோவில் ஒன்றிய பெருந்தலைவர் நந்தினிஸ்ரீதர், தரங்கம்பாடி பேரூ ராட்சி தலைவர் சுகுணசங்கரி மற் றும் மீன்வளத்துறையினர், மீனவ பஞ்சாயத்தார்கள் உடனிருந்த னர்.