districts

பேராவூரணி அரசு மருத்துவமனையின் நிர்வாக சீர்கேடுகளைக் கண்டித்து ஜன.11-ல் ஆர்ப்பாட்டம் சிபிஎம் அறிவிப்பு

பேராவூரணி, ஜன.6-  பேராவூரணி அரசு மருத்துவமனை நிர்வாகச் சீர்கேடுகளை கண்டித்து, ஜன வரி 11 அன்று ஆர்ப்பாட்டம் நடத்தப்ப டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி  தெரிவித்துள்ளது.  தஞ்சாவூர் மாவட்டம் சேதுபாவா சத்திரம் ஒன்றியம் மணக்காடு கிரா மத்தைச் சேர்ந்தவர் ராஜேஷ். கூலித் தொழிலாளியான இவரது மனைவி நீவிதா (23) இரண்டாவது பிரசவத்திற் காக கடந்த டிசம்பர் 24-ஆம் தேதி பேரா வூரணி அரசு மருத்துவமனையில் அனு மதிக்கப்பட்டார்.  டிச.26 ஆம் தேதி அறுவை சிகிச்சை  மூலம் ஆண் குழந்தை பிறந்துள்ளது. அறுவை சிகிச்சைக்கு பின் உடல்நலம் பாதிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் டிசம்பர் 28 -ஆம் தேதி நீவிதா மரணம் அடைந்தார்.  இந்நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி மாவட்டச் செயற்குழு உறுப்பினர் ஆர்.மனோகரன், நிர்வாகி கள் வீ.கருப்பையா, ஆர்.எஸ்.வேலுச் சாமி, சேகர், செந்தில் குமார் ஆகியோர்  மணக்காடு சென்று நீவிதா குடும்பத்தி னரை சந்தித்து ஆறுதல் கூறினர். பின்னர், இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயற்குழு  உறுப்பினர் ஆர்.மனோகரன் கூறுகை யில், ‘‘அரசு மருத்துவமனையில் ஆரோக் கியமான நிலையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட இளம் பெண் நீவிதா,  மருத்துவமனையின் அலட்சியம் காரணமாக, மேல் சிகிச்சைக்கு அனுப்பப் பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.  அரசு மருத்துவமனையின் தவ றான சிகிச்சையால், உயிரிழந்த நீவிதா வின் குழந்தைகள் மற்றும் அவருடைய  கணவருக்கு இழப்பீடாக அரசு ரூ.5  லட்சம் வழங்க வேண்டும். மருத்துவ மனை சீர்கேடுகளைக் கண்டித்தும், போதிய மருத்துவர்கள் நியமனம் செய்ய  வேண்டும்.   மருத்துவ உபகரணங்கள், சர்க்கரை, ரத்த அழுத்தத்துக்கான மருந் துகள் உள்ளிட்டவற்றை தட்டுப்பா டின்றி வழங்க வேண்டும். மருத்துவ மனையை தரம் உயர்த்த வேண்டும். பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என வலி யுறுத்தி ஜனவரி 11 அன்று பேரா வூரணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பொதுமக்களை திரட்டி ஆர்ப்பாட் டம் நடத்தும்’’ என்றார்.