districts

img

சிதிலமடைந்து கிடக்கும் தொட்டிப் பாலம் சீரமைக்கப்படுமா? இன்று விவசாயிகள், சிபிஎம் சாலை மறியல்

திருவாரூர், ஜூலை 26 -  திருவாரூர் ஒன்றியத்துக்குட்பட்ட வேப்பந்தங்குடி ஊராட்சியில் அமைந் துள்ளது வயலூர் கிராமம். ஊரின் பெயரே காரணப் பெயராக அமைந்தது  போல சுற்றிலும் வயல்கள் சூழ காணப் படுகிறது. ஆனால் இந்த வயல்களில் விவசாயம் செய்வதற்கு பாசன நீருக் காக அரசாங்கத்தோடும் அதிகாரி களோடும் ‘வாய்க்கால் தகராறு’ செய்யும் நிலையில்தான் இப்பகுதி மக்கள் இருக்கின்றனர்.  பலமுறை கடிதம் கொடுத்தும், கவனப்படுத்தியும் பாசன வாய்க் காலை சரிசெய்ய எவ்வித நடவடிக்கை யும் எடுக்காத அதிகாரிகளைக் கண்டித்து, அப்பகுதி மக்கள் மார்க்சி ஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவோடு சாலை மறியலை அறிவித்துள்ளனர்.  இந்த ஆண்டு வழக்கத்தைவிட முன் கூட்டியே மேட்டூர் அணை திறக்கப் பட்டது. தமிழகம் முழுக்க தூர்வாரும் பணிகளுக்காக நிதி ஒதுக்கி பணி கள் முடுக்கி விடப்பட்டன. குறிப்பாக  டெல்டா மாவட்டங்களில் முதலமைச் சரே நேரடியாக வந்து ஆய்வு நடத்தி யுள்ளார். ஆனாலும் தலைநகரை ஒட்டி  அமைந்துள்ள கிராமத்தில் சுமார் 300  ஏக்கர் நிலங்களுக்கு பாசன நீர் கிடைக்காத நிலையில் வாய்க்கால்கள் தூர்வாரப்படாமல் இருப்பதற்கு அதி காரிகளின் அலட்சியமே காரணம் என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்

சன்னவாய்க்கால் தொட்டிப்பாலம் 
வெள்ளையாற்றிலிருந்து பிரியும் சித்தாறு இக்கிராமத்தின் வழியே பாய் கிறது. இதன் மீது குறுக்காக தொட்டிப் பாலம் கட்டப்பட்டு அதன் வழியாக சன்ன வாய்க்கால் தண்ணீர் கடந்து செல் கிறது. தற்போது இந்த தொட்டிப்பாலம் சிதிலமடைந்து கிடப்பதால் சன்ன வாய்க்கால் நீர் முழுவதும் சித்தாற்றில் வடிந்து விடுகிறது. இதனால் சுமார் 300  ஏக்கர் நிலங்களுக்கு ஆயில் என்ஜின் வைத்து நீர் பாய்ச்சும் நிலைதான் உள்ளது. இந்த சன்ன வாய்க்காலை மறு கட்டமைப்பு செய்து தர வேண்டும் என  நீர்வள ஆதாரத் துறைக்கு பலமுறை  மனு கொடுத்துள்ளோம். முதலமைச்ச ரின் தனிப்பிரிவுக்கும் புகார் அனுப்பி யுள்ளோம். இதுவரை அரசு நடவ டிக்கை எடுக்காததால் 500-க்கும் மேற் பட்ட சிறு, குறு விவசாயிகளும் விவசா யத் தொழிலாளர்களும் நிர்க்கதியாக நிற் கிறோம் என விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

உப்பு நீர் 
இப்பகுதியில் நிலத்தடி நீர் உப்பு  நீராக இருக்கிறது. அதனை விவசாயத் துக்கு பயன்படுத்த முடிவதில்லை. சன்ன வாய்க்கால் தொட்டிப்பாலம் சரி செய்யப்பட்டு, வாய்க்கால்களும் தூர் வாரப்பட்டால் வயல்களுக்கு பாசன நீர்  எளிதாக கிடைக்கும். ஆனால் வாய்க்கால் தூர்வாரப்படாததால் விவசாயிகள் ஆயில் என்ஜின் மூலம் நீர்பாய்ச்சி வரு கிறார்கள். நிலத்தடி நீரும் உப்பாக இருப்ப தால், அரசின் இலவச மின்சாரம் மூலம்  இயங்கும் மின் மோட்டார் பம்ப்செட் கூட இப்பகுதியில் அமைக்க வாய்ப் பில்லை. இதனால் விவசாயிகள் பாசனத் துக்காக ஆயில் என்ஜின் பராமரிப்பு, டீசல் செலவு என பொருளாதார சுமை யில் சிக்கித் தவிக்கின்றனர்.

பா மதகடி, கீழ்க்குமிழி மதகுகள் 
தொட்டிப்பாலம் சரிசெய்யாமல்  கிடப்பதால் வாய்க்கால்களும் தூர்வாரப் படாமல் விடப்பட்டுள்ளதோடு, பா மத கடி, கீழ்குமிழி மதகு ஆகியவையும் கவனிப்பாரின்றி சேதமடைந்துள்ளன. இதனால் டிராக்டர், கை வண்டி போன்ற  வேளாண்மை சார்ந்த வாகனங்களும் சென்று வர சிரமமாக உள்ளது. இவ்வாறு பல்வேறு வகையிலும் இப்பகுதி விவசாயிகள் சிரமத்துக்கு உள்ளாகி விரக்தியில் ஆழ்ந்துள்ளனர்.  தங்களுக்கு நியாயம் கிடைக்க புதன் கிழமை (ஜூலை 27) அன்று சாலை மறி யலை அறிவித்துள்ள நிலையில், திங்கள்கிழமை அன்று போராட்ட ஏற்பாடுகளையும் அப்பகுதி நிலைமை யையும் பார்வையிட்ட சிபிஎம் மாநிலக் குழு உறுப்பினர் ஐ.வி.நாகராஜன் கூறியதாவது:  “வாய்க்கால் பாசனத்தை மட்டுமே நம்பி விவசாயம் நடைபெறும் பகுதி யில், இத்தகைய நிலைமை தொடர்வ தற்கு அதிகாரிகளின் பொறுப்பற்ற தன்மையும், விவசாயிகள் மீது அக்கறை யில்லாத போக்கும்தான் காரணம். இப்பகுதியில் தொட்டிப்பாலம் மற்றும் மதகுகள் கட்டப்பட்டு வாய்க்கால்கள் தூர்வாரப்பட்டு விவசாயிகள் பிரச்சனை  தீரும் வரை மார்க்சிஸ்ட் கட்சி விவசாயி களோடு துணை நிற்கும்” என உறுதி யளித்தார். புதன்கிழமை நடைபெறும் சாலை  மறியலில் அனைத்துப் பகுதி மக்க ளும் கலந்துகொண்டு ஆதரவளிக்க வேண்டுமென அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.