திருவாரூர், ஏப். 20 - வாக்குறுதிகளை நிறைவேற்றாத ஒன்றிய மோடி அரசைக் கண்டித்து திருவாரூர் மாவட்டத்தில் ஐக்கிய விவசா யிகள் முன்னணியின் சார்பில் தெருமுனை பிரச்சாரம் நடை பெற்றது. முன்னணியின் நிர்வாகிகள் உரையாற்றினர். தலைநகர் தில்லியில் ஓராண்டு காலம் நடைபெற்ற விவசா யிகள் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவர மோடி அர சாங்கம் அளித்த உறுதிமொழிகளை நிறைவேற்றவில்லை. குறிப்பாக வேளாண் விளை பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை தருவது, அரசே கொள்முதல் செய்வது, உடன் படிக்கையின்படி புதிய வேளாண் சட்டங்களை அறவே ரத்து செய்வது ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து பிரச்சா ரம் நடைபெற்றது. திருவாரூர் ஒன்றியத்தில் மாவூர் கடைவீதி யில் துவங்கி விளமல் பகுதியில் பிரச்சாரம் நிறைவுபெற்றது.