திருவாரூர், மார்ச் 7- தில்லியில் ஏப்ரல் 5-ஆம் தேதி நடைபெறும் பேரணி யை விளக்கி கொரடாச்சேரி ஒன்றியத்தில் தமிழ்நாடு விவ சாயிகள் சங்கம், அகில இந் திய விவசாயத் தொழிலாளர் கள் சங்கம், சிஐடியு சார்பில் பிரச்சார நடைப்பயணம் நடைபெற்றது. இந்தப் பிரச்சாரத்தில் வேளாண் விளைப்பொருட் களுக்கு ஆதார விலை வழங்க வேண்டும். விவசாயக்கடன் களை தள்ளுபடி செய்ய வேண்டும். 100 நாள் வேலைத் திட்டத்திற்கான நிதியை குறைக்கக் கூடாது, பெட் ரோல், டீசல், சமையல் எரி வாயு ஆகிய பொருட்கள் மீதான வரியை குறைத்து, விலையை குறைக்க வேண் டும். புதிய மோட்டார் வாக னச் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட 14 கோரிக்கைகள் வலியு றுத்தப்பட்டது. கொரடாச்சேரி ஒன்றியம் குளிக்கரை கரையில் துவங் கிய பிரச்சார நடை பயணத் திற்கு தமிழ்நாடு விவசாயி கள் சங்க மாவட்டச் செயலா ளர் எம்.சேகர், கமலாபுரத் தில் சிஐடியு மாவட்டச் செய லாளர் டி.முருகையன், பவித் திரமாணிக்கத்தில் விவசா யத் தொழிலாளர்கள் சங்க மாவட்டத் துணைச் செயலா ளர் ஆர்.மணியன் ஆகியோர் தலைமை வகித்தனர். பிரச்சா ரப் பயணம் கொரடாச்சேரி ஒன்றியம் வெட்டாற்று பாலத் தில் நிறைவடைந்தது. வலங்கைமான் ஒன்றி யம் கொட்டையூரில் சிஐடியு மாவட்டத் துணைச் செயலா ளர் கே.பி.ஜோதிபாசு, தமிழ் நாடு விவசாயிகள் சங்க மாவட்டத் துணைச் செயலா ளர் கே.சுப்பிரமணியன், அகில இந்திய விவசாய தொழிலா ளர்கள் சங்க மாவட்ட துணைத் தலைவர் என்.பாலையா ஆகி யோர் தலைமை வகித்தனர். அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்கத்தின் மாநில குழு உறுப்பினர் கே.தமிழ்ச்செல்வி பயணக் குழுவை துவங்கி வைத்தார். விவசாய தொழிலாளர் சங் கத்தின் மாவட்ட செயலா ளர் பி.கந்தசாமி பிரச்சாரப் பயணத்தை நிறைவு செய்து பேசினார்.