திருவாரூர், ஜூன் 15 - தமிழக அரசு வேளாண்மைப் பொறியியல் துறையின் மூலம் தேசிய வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் “வேளாண் இயந்திரங்கள் மற்றும் சூரிய சக்தியால் இயங்கும் பம்புசெட்டுகள் பழுது நீக்கும் பராமரிப்பு மையம் மானியத்தில் அமைக் கும் புதிய திட்டத்தை கடந்த 2021-22- ஆம் ஆண்டு முதல் செயல்படுத்தி வருகிறது. விவசாயிகள் தங்கள் வேளாண் இயந்தி ரங்கள் மற்றும் சூரிய சக்தியால் இயங்கும் பம்புசெட்டுகளை தங்கள் விளைநிலங் களிலேயே பழுதுநீக்கி பராமரிக்கவும், விவ சாயிகள் வேளாண் பணிகளை எவ்வித இடர் பாடுகளுமின்றி குறித்த நேரத்தில் செய்திட வும், கிராமப்புற இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கி நிலையான வருமானம் ஈட்டி பொருளாதாரத்தை மேம்படுத்தும் நோக் கத்துடனும் இம்மையங்கள் அமைக்கப்படு கின்றன.
தொழில் முனைவோர் விவசாய குழுக்கள் மற்றும் உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களுக்கு இம்மையங்கள் மானி யத்தில் அமைத்துத் தரப்படும். இம்மையங்கள் ரூ.8 லட்சம் செலவில் அமைக்கப்படுகின்றன. இதில் 50 சதவீத மானிய அடிப்படையில் அதிகபட்சமாக ரூ.4 லட்சம் மானியம் வழங்கப்படும். மையங்கள் அமைக்க போதிய இடவசதியும் மும்முனை மின்சார இணைப்பும் கொண்ட கிராமப்புற இளைஞர்கள், தொழில் முனைவோர்கள் விவசாய குழுக்கள் மற்றும் உழவர் உற்பத்தி நிறுவனங்கள் தங்கள் அருகாமை யிலுள்ள வேளாண் பொறியியல் துறையின் உதவி செயற்பொறியாளர் (வே.பொ) அலுவ லகத்தை அணுகி விண்ணப்பித்தினை அளிக்கலாம். மாவட்ட ஆட்சியரின் மாவட்ட அளவி லான செயற்குழு கூட்டத்தில் ஒப்புதல் பெற்ற பின்னரே பயனாளிகளுக்கு இம்மையம் மானியத்தில் அமைத்துத் தரப்படும். மையங் கள் அமைக்கத் தேவையான இயந்திரங்கள், ஒப்பந்தப் புள்ளி அடிப்படையில் கண்கா ணிப்புப் பொறியாளரால் (வே.பொ) முடிவு செய்யப்பட்டு பயனாளிகள் மொத்தத் தொகையினை செலுத்தி வாங்கிக் கொள்ள லாம். பின்னர் சம்பந்தப்பட்ட உதவி செயற்பொ றியாளர் (வே.பொ) மையத்தினை நேரில் ஆய்வு செய்து திருப்தி அளிக்கும் வகையில் இருப்பின் மானியத் தொகையினை பயனா ளியின் வங்கிக் கணக்கில் பின்னேற்பு மானிய மாக செலுத்தப்படும். மேலும் விவரங்களுக்கு அருகாமையிலுள்ள வேளாண்மைப் பொறி யியல் துறை உதவி செயற்பொறியாளர் (வே.பொ)களை அணுகுமாறு மாவட்ட ஆட்சியர் ப.காயத்ரிகிருஷ்ணன் கேட்டுக் கொண்டுள் ளார்.