districts

img

மின்வாரியத்தின் மெத்தனப்போக்கால் விவசாயக் கூலித் தொழிலாளி பலி

திருவாரூர், நவ.3- திருவாரூர் மாவட்டம் தண் டலை கிராமத்தை சேர்ந்த விவ சாய கூலி தொழிலாளி சோம சுந்தரம். இவருக்கு அந்தோணி (36) என்ற மனைவியும், ஆர்த்தி என்ற 18 வயது பெண்  குழந்தையும், பாலா என்ற 15 வயது ஆண் குழந்தையும் உள்  ளனர். இவர்களுடன் 90 வய தான தாய் பச்சைமால் உள் ளிட்டோர் பல ஆண்டுகளுக்கு மேலாக தண்டலை கிராமத்தில் வசித்து வருகின்றனர்.  கடந்த 20/10/2022 அன்று  வழக்கம் போல் கூலி வேலைக்கு சென்றார், சோமசுந்தரம். 2018 -ஆம் ஆண்டில் டெல்டா மாவட்  டங்களில் மிகப்பெரும் பாதிப்பை ஏற்படுத்தி மக்களை நிலை குலைய செய்த கஜா  புயலினால் விளை நிலத்தில் அமைக்க பட்டிருந்த மும் முனை மின்சாரம் செல்லும் மின் கம்பமானது விளை நிலத்  தில் சாய்ந்த நிலையில் இருந்து வந்தது.  சாய்ந்த மின் கம்பத்தின் மின் இணைப்பை துண்டிக்கா மல் பல ஆண்டுகளாக மின்சார வாரியம் மெத்தனமாக இருந்து வந்தது. இந்நிலையில், விளை நிலங்களுக்கு பாதுகாப்பாக வயலில் அமைக்கப்பட்டிருந்த இரும்பு முள் வேலியின் மேல் மின் கம்பத்திலிருந்து மின் கசிவு ஏற்பட்டிருக்கிறது. இதை அறியாத விவசாயக் கூலித் தொழிலாளி சோமசுந்தரம் இரும்பு முள்வேலியை பற்றிய தும் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
ஆறுதலும் கோரிக்கையும்
சோமசுந்தரத்தின் வருமா னத்தில் தான் குடும்பம் நடந்து வந்தது. வசிக்க சொந்த வீடும் இல்லாமல் கடும் சிரமத்தில் அவ ரது குடும்பம் இருந்து வந்தது. இந்நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில குழு உறுப்பினர் ஐ.வி.நாக ராஜன் நேரில் சென்று சோம சுந்தரத்தின் குடும்பத்தினருக்கு இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்தார்.  அப்போது மின்சார வாரி யத்தின் அலட்சியப் போக்கால் உயிரிழந்த கூலித் தொழிலாளி சோமசுந்தரத்தின் குடும்பத்தின ருக்கு தமிழ்நாடு அரசு நிவா ரண நிதி மற்றும் மின்சார வாரிய நிதியும் இணைந்து ரூ.15 லட் சம் இழப்பீட்டுத் தொகையும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும், ஒரு வீடும் கட்டித்  தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.  திருவாரூர் ஒன்றியச் செய லாளர் என்.இடும்பையன் மற்  றும் கட்சியின் மூத்த தோழர் கே. ரங்கசாமி மற்றும் கொரடாச் சேரி ஒன்றிய குழு உறுப்பினர் கே.தனுஷ்கோடி ஆகியோர் அவருடன் இருந்தனர்.