districts

சிபிஎம் நீடாமங்கலம் ஒன்றியக் குழு கூட்டம்

 மன்னார்குடி, நவ.25- நீடாமங்கலத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியக் குழு கூட்டம் பி.காளியப்பன் தலைமையில் நடை பெற்றது.  கூட்டத்தில் மாநிலக் குழு உறுப்பினர் ஐ.வி.நாக ராஜன், செயற்குழு உறுப்பினர்கள் தமிழ்மணி, பி.கந்த சாமி, ஒன்றியச் செயலாளர் ஜான் கென்னடி, மாவட்டக் குழு உறுப்பினர் சுமதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.  கூட்டத்தில், நீடாமங்கலம் வட்டாரத்தில் உரத்தட்டுப் பாடு உள்ளது. கூட்டுறவு வங்கியிலும் உரம் இல்லை. எனவே தனியார் விவசாய உரம் அதிக அளவில் விற்கப்படுகிறது. மாவட்ட நிர்வாகமும், அரசும் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும். மின்சார வாரியத்தில் மின் கட்டணம் செலுத்தும் போது ஆதார் இணைப்பதை தமிழக அரசு தடை செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.