திருவண்ணாமலை, மார்ச் 17- பொதிகை மின்னல் இலக்கிய நூல் போட்டி மாநில அளவில் சென்னை கோட்டூர்புரம் அண்ணா நினைவு நூற்றாண்டு நூலகம் அருகில் தமிழ் இணையவழிப் பல்கலைக் கழகத்தில் நடைபெற்றது. நாவல் போட்டியில் வெற்றி யாளர்கள் மூவருக்கு சம பரிசுகள் மற்றும் விருதுகள் வழங்கப்பட்டன. பெரணமல்லூர் சேகரனின் ‘படுகளம்’, அண்ட னூர் சுராவின் ‘தீவாந்திரம்’, வள வதுரையனின் ‘மதகு’ஆகிய நாவல்கள் விருதும் பரிசும் பெற்றன. இந்நிகழ்வுக்கு பொதிகை மின்னல் டாக்டர் விஜயஸ்ரீ மகா தேவன் தலைமை தாங்கினார். விருதுகளை வழங்கி கவிஞர் பூவை. செங்குட்டுவன், எழுத்தாளர்கள் நெல்லை சு.முத்து, என்.சி. மோகன்தாஸ், கார்முகிலோன், உதயம் ராம், பார்வதி பாலசுப்ரமணியன், புதுவை தமிழ் நெஞ்சன், மெய் ரூஸ்வெல்ட் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். முன்னதாக பொதிகை மின்னல் ஆசிரியர் வசீகரன் வரவேற்றார். புனிதஜோதி நிகழ்ச்சியைத் தொகுத்தார். திரைப்பட இயக்குநர் எஸ்.பி. முத்துராமன் வாழ்த்துரை வழங்கினார்.