திருவள்ளூர், மார்ச் 26- திருவள்ளூர் வெள்ளாத்துக்கோட்டை யிலுள்ள ஆசிரமத்திற்கு சென்ற கல்லூரி மாணவி ஹேமமாலினி மர்மமான முறை யில் உயிரிழந்த வழக்கு சிபிசிஐடி-க்கு மாற்றப் பட்டுள்ளதை மாதர் சங்கத்தினர் வரவேற் றுள்ளனர். ஊத்துக்கோட்டை வட்டம், பூண்டி ஒன்றியத்திற்குட்பட்டது வெள்ளாத்துக் கோட்டை. இந்த பகுதியிலுள்ளது துர்க்கை அம்மன் கோயிலில் முனுசாமி என்பவர் ஆசிரமம் நடத்தி வருகிறார். இங்கு கல்லூரி மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்டார். இந்த வழக்கு திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண் குமார், கூடுதல் கண்காணிப்பாளர் மீனாட்சி ஆகியோர் தலைமையில் கடந்த ஒரு மாதமாக விசாரணை நடைபெற்று வந்தது. இதில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. இதனையடுத்து வழக்கை சிபிசிஐடிக்கு மாற்ற காஞ்சிபுரம் சரக காவல்துறை துணைத் தலைவர் சத்தியபிரியா உத்தரவு பிறப்பித்துள்ளார். அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் கே.ரமா, மாவட்டச் செயலாளர் இ.மோகனா, பொரு ளாளர் ஏ.பத்மா ஆகியோர் வரவேற்றுள்ள னர். மேலும், உண்மைகளை விரைவாக கண்டறிந்து வெளியிட வேண்டும் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு உரிய நியாயம் கிடைக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.