districts

வடசென்னை அனல்மின் நிலைய ஒப்பந்த ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய கோரிக்கை

திருவள்ளூர், ஆக. 2- மின்சார வாரியத்தில் பணி யாற்றிய வரும் ஒப்பந்த ஊழியர் களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு மின்  ஊழியர் மத்திய அமைப்பு வலியுறுத் தியுள்ளது. தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் வடசென்னை அனல் மின் நிலைய கிளையின் 12 வது ஆண்டு பேரவை அத்திப்பட்டு குடி யிருப்பு முகாமில் தோழர் பி.சீனிவா சன் நினைவிரங்கத்தில் நடை பெற்றது.  வடசென்னை அனல் மின் நிலைய திட்ட தலைவர் பி.ஜெய் வேலு தலைமை தாங்கினார். துணைத் தலைவர் ஜி.பாண்டியன் வரவேற்றார். இணைச் செயலாளர் ஜி.சலீல்குமார் அஞ்சலி தீர் மானத்தை வாசித்தார். செயலா ளர் எஸ்.சுந்தரம் வேலை அறிக்கை யையும், பொருளாளர் இ.ரவி வரவு  செலவு அறிக்கையையும் சமர்ப்பித்த னர்.  மத்திய அமைப்பின் மாநில துணைச் செயலாளர் டி.அறிவழகன் கொடிற்றியுரையாற்றினார். சிஐடியு மாவட்ட தலைவர் கே.விஜயன், துணை நிர்வாகிகள் பி.கதிர்வேலு, கே வெங்கடேசன், ராஜன் ஆகி யோர் வாழ்த்துரை வழங்கினர். மின் ஊழியர் மத்திய அமைப்பின் மாநில துணைப் பொதுச் செயலா ளர் வி.இளங்கோ பேரவையை நிறைவு செய்து பேசினார். இணைச்  செயலாளர் ஜி. குமார் நன்றி கூறினார்.
நிர்வாகிகள்
திட்டத் தலைவராக ஜி.பாண்டி யன், செயலாளராக இ.ரவி, பொருளாளராக ஜி.சலீல்குமார் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
தீர்மானங்கள்
நிரந்தர தொழிலாளர்களுக்கு பஞ்சப்படி வழங்க வேண்டும், விடுப்பு ஈட்டுத்தொகை வழங்க வேண்டும், ஊதிய உயர்வுக்கான பேச்சுவார்த்தை துவங்க வேண்டும், கேங்மேன் ஊழியர்களின் பயிற்சி காலத்தை குறைக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.