திருவள்ளூர், நவ.4- திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப் பூண்டி ஒன்றியம், எருக்குவாய் ஊராட்சிக்கு உட்பட்ட எழுச்சி நகர், அருகில் உள்ள வில்லியர் காலனியில் 25 க்கும் மேற்பட்ட இருளர் குடும்பத் தினர் சுமார் 70 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வருகின்றனர். இப்பகுதியில் மகளிர் சுய உதவிக் குழுக்கள் எதுவும் அமைக்கப் படவில்லை. இதனால் வங்கியில் குறைந்த வட்டிக்கு கடன் கிடைக்கா மல் தனியார் நுண்நிதி நிறுவனங்களில் கடன்களை பெற்று, தாங்க முடியாத கடன் சுமையில் இந்த மக்கள் தத்தளிக்கின்றனர். தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கத்தின் சார்பில் இளைஞர்களுக்கான எந்த பயிற்சியும் அளிக்கப்படவில்லை. தமிழக முதலமைச்சரின் சிறப்பு திட்ட செய லாக்க துறை சார்பில் நரிக்குறவர், பழங்குடியினர் மற்றும் இதர விளிம்பு நிலையில் உள்ள மக்கள் வசிக்கும் பகுதிக்கு அதிகாரிகள் நேரடியாக சென்று கள ஆய்வு செய்து, தொடர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியருக்கு, முதலமைச்சர் ஏற்கனவே உத்தரவிட்டுள்ளார். எருக்குவாய் ஊராட்சிக்கு உட்பட்ட வில்லியர் காலனியில் குடி மனைப் பட்டா, தெருவிளக்கு, சாலை வசதி, வடிகால் வசதி, ஆரம்ப சுகாதார நிலைய இல்லை. மேலும் மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை, முதியோர் முதிர் கன்னி ஓய்வூதியம், முதலமைச்சரின் மருத்துவ காப்பீடு என எந்த திட்டங்க ளும் எங்களுக்கு கிடைக்கவில்லை என்று அம்மக்கள் கூறுகின்றனர். குடும்ப அட்டை, சாதிச் சான்றிதழ், ஓய்வூதியம், முதிர் கன்னி ஓய்வூதி யம், முதலமைச்சரின் விரிவான காப் பீட்டு திட்டம் ஆகிய அரசு நலத் திட்டங்கள் இம்மக்களை சென்றடைய வேண்டும். எனவே அரசு அதிகாரிகள் இந்த கிராமத்திற்கு நேரடியாக வந்து மக்களை சந்தித்து கோரிக்கைகளை கேட்கவேண்டும். அவற்றை குறிப்பிட்ட காலத்திற்குள் நிறைவேற்றவேண்டும் என்று அம்மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தொழில் தொடங்க கடன் வசதி தேவைப்படும் இளைஞர்களை கண்ட றிந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், மகளிர் சுய உதவிக்குழு அமைக்க ஏற்பாடு செய்யவேண்டும், கிராம மக்களின் அடிப்படைத் தேவை களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் ஆர் தமிழரசன், மாவட்ட ஆட்சியரிடம் வெள்ளியன்று (நவ 4) மனு அளித்தார்.