districts

img

260 மாணவர்களுக்கு 2 ஆசிரியர்: பெற்றோர் அதிர்ச்சி

திருவள்ளூர், மார்ச் 19- திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அருகில் உள்ள  மாளந்தூரில் அரசு உயர்நிலைப் பள்ளி 2011-12 ம் கல்வியாண்டில் உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. இதில் 6-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை  260 மாணவர்கள் தமிழ்  மற்றும் ஆங்கில வழியில் கல்வி பயில்கின்றனர். குறிப்பாக பத்தாம் வகுப்பில் மட்டும்  61 மாணவர்கள் படிக்கின்ற னர். இந்த பள்ளியில் உள்ள 16 பணியிடங்களில் 10ஆசிரியர்களை மட்டும் பல போராட்டங்களுக்கு பிறகு  நிரப்பப்பட்டு பணியாற்றி வந்தனர். இந்த பள்ளியில் படித்த மாணவர்  ஒருவர் மருத்துவ படிப்பிற்கு கலந் தாய்வு மூலம் இடம் கிடைத்துள்ளது. தற்போது மாணவர்கள் பட்ட மேற்படிப்பு படிக்கும் நிலையும் அதிகரித்துவருகிறது. இந்த நிலையில் பொது தேர்வுகள்  நெருங்கும் நேரத்தில் திடீரென மாளந்தூர் உயர்நிலைப் பள்ளியில் 8-ஆசிரியர்கள் பணி மாறுதல் பெற்று வேறு பள்ளிகளுக்கு சென்று விட்டனர். தற்போது பள்ளி யின் தலைமை ஆசிரியர் உட்பட 2 பேர் மட்டுமே பணியில் உள்ளனர். இதனால் மாணவர்களின் கற்றல்  திறன்  வெகுவாக பாதிக்கப்பட்டுள்ள தாக பெற்றோர் குற்றம் சாட்டி னர். பொதுத் தேர்விற்கு இன்னும்  2 மாதங்களே உள்ள நிலையில் மாண வர்களின் நிலை கேள்விக்குறியாகி யுள்ளது. தேர்வுகள் முடியும் வரை ஏற்கெனவே பணியில் இருந்த ஆசிரியர்களை மீண்டும் நியமிக்க வேண்டும். மாளந்தூருக்கு காலை,  மாலை நேரங்களில் கூடுதல்  பேருந்துகள் இயக்கப்பட வேண்டும், வகுப்பறைகள் இல்லாமல்  மரத்தடியில் பாடம் நடத்தப்படுகிறது. ஆகவே புதிய வகுப்பறைகள் கட்டி  கொடுக்க வேண்டும், சத்துணவு கூடம் அமைக்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி ஊராட்சி மன்ற தலைவர் வி.விஜயன் மாவட்ட ஆட்சியரிடம் மனுவும் அளித்துள்ளார். இது குறித்து திருவள்ளூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்  ஆறுமுகம் அவர்களிடம்  கேட்ட போது,  ஆசிரியர்கள் பற்றாக்குறை  பிரச்சினை பல இடங்களில் இருக்கி றது.தற்போது ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு நடைபெற்று வருகிறது.எனினும் பொது தேர்வுகள் முடியும் வரை எந்த பணி மாறுதல்கள் நடைபெறாது.ஏற்கனவே பணியாற்றி வந்த பள்ளிகளிலேயே தேர்வுகள் முடியும் வரை ஆசிரியர்கள் பணியாற்றுவார்கள் அதற்கான உத்தரவை பிறப்பிக்கப்பட்டுள்ளது என்றார். - பெ.ரூபன்