districts

img

சுகாதார வளாகம் கட்ட அனுமதி கோரி சிபிஎம் சார்பில் காத்திருப்பு போராட்டம்

பாபநாசம், அக்.6- பாபநாசம் குப்பை மேடு இபி தெருவில் வருவாய்த்  துறைக்கு சொந்தமான இடத் தில் பேரூராட்சி நிதி உதவி யுடன் சுகாதார வளாகம், சமு தாயக் கூடம் கட்ட வருவாய்த்  துறையின் ஆட்சேபமின்மை கடிதம் உடனடியாக வழங் கக் கோரியும், பாபநாசம் பழைய பேருந்து நிலையத் தில் வருவாய்த் துறைக்குச் சொந்தமான இடத்தில் பேரூ ராட்சி நிதி உதவியுடன் கழி வறை மற்றும் குடிநீர் வசதி  செய்திட வருவாய்த் துறை யின் ஆட்சேபமின்மை கடி தம் உடனடியாக வழங்கக் கோரியும் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி சார்பில் பாப நாசம் வட்டாட்சியர் அலுவல கம் முன்பு காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.  நகரச் செயலாளர் சங்கர் தலைமை வகித்தார். கிளைச் செயலாளர் கிருஷ்ண மூர்த்தி, விவசாயத் தொழி லாளர் சங்கம் இளங்கோ வன் முன்னிலை வகித்தனர். இதில் மாவட்டக் குழு காதர்  உசேன், ஒன்றியச் செயலா ளர் முரளிதரன், ஒன்றியக் குழு மகேந்திரன், சின்னை யன் உட்பட பலர் பங்கேற்ற னர். போராட்டத்தில் ஈடு பட்ட 43 பேர் கைது செய்யப்  பட்டனர்.