districts

img

மாஞ்சோலை தோட்ட தொழிலாளர்களின் நினைவு தினம்: சிபிஎம் அஞ்சலி

மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு நெல்லை கொக்கிரகுளத்தில் உள்ள தாமிரபரணி ஆற்றில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மலர் தூவி அஞ்சலி செலுத்தியது.

 கடந்த 1999 ஆம் வருடம் ஊதிய உயர்வு கோரி மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுப்பதற்காக ஊர்வலமாக வந்தனர் அப்போது அங்கு பணியில் இருந்த போலீசார் மாஞ்சோலை தேயிலை  தோட்ட தொழிலாளர்களை தடுத்து நிறுத்தி கம்பால் அடித்து ஆற்றுக்குள் விரட்டி நீரில் மூழ்க வைத்து அடித்ததால் 17 பேர் இந்த சம்பவத்தில் உயிரிழந்தனர். இந்நிலையில் மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்களின் நினைவு தினமான ஜூலை 23ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் ஸ்ரீராம் தலைமையில் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநில பொதுச் செயலாளர் சாமுவேல்ராஜ், முன்னாள் எம்எல்ஏ ஆர்.கிருஷ்ணன் ஆகியோர் தாமிரபரணி ஆற்றில் மலர் வளையம் வைத்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினர், இந்த நிகழ்வில் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஆர்.மோகன்,எம்.சுடலைராஜ் ,துரைராஜ் ,பெருமாள் மாவட்ட குழு உறுப்பினர்கள் பழனி, எஸ் .கே.செந்தில், துரை நாராயணன்,ஆர்.முருகன்,கே.மாரிசெல்வம், எஸ்.வி.பாலசுப்பிரமணியன் சி.ஐ.டி.யு மாவட்ட தலைவர் எல்.சரவணபெருமாள் ,தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்ட தலைவர் ஆர்.மதுபால், காப்பீட்டுக் கழக ஊழியர் சங்க கோட்ட  தலைவர் செ.முத்துக்குமாரசாமி, வாலிபர் சங்கம் மாவட்ட பொருளாளர் அருள், மாற்றுத்திறனாளிகள் சங்க மாவட்ட செயலாளர் முத்து மணிகண்டன்,ஏடி.சி. தொழிற்சங்க நிர்வாகிகள் சின்னதுரை,விநாயகம், ராஜகோபால், உட்பட ஏராளமான கலந்து கொண்டனர்.