districts

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் காணிக்கை ரூ.1.47 கோடி

தூத்துக்குடி, ஏப்.10- திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ரூ.1.47 கோடியை  காணிக்கையாக பக்தா்கள் செலுத்தியுள்ள னர். திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் இணை ஆணையர் (பொ) சி.குமரதுரை தலைமையில் உண்டி யல் காணிக்கை எண்ணும் பணி நடை பெற்றது. உதவி ஆணையா்கள் ரத்தினவேல் பாண்டியன் (நாகா்கோவில்), வெங்கடேஷ் (திருச்செந்தூர்), ஆய்வர்கள் செந்தில்நாயகி, முப்பிடாதி, தக்கார் பிரதிநிதி ஆ.சி. பால சுப்பிரமணிய ஆதித்தன் ஆகியோர் முன் னிலை வகித்தனர்.  பொதுமக்கள் சார்பில் வேலாண்டி, மோகன், கருப்பன் மற்றும் சிவகாசி பதி னெண் சித்தர் மடம் குருகுல வேதபாடசாலை உழவாரப்பணிக்குழுவினர் மற்றும் கோயில் பணியாளர்கள் உண்டியல் எண்ணும் பணி யில் ஈடுப்பட்டனர். இதில், 13 நாள்களில், ரூ. 1 கோடியே 47 லட்சத்து 90 ஆயிரத்து 943 மற்றும் தங்கம் 1,300 கிராம், வெள்ளி 45 ஆயி ரத்து 562 கிராம், வெளிநாட்டு கரன்சிகள் 36-ஆகியவற்றை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியுள்ளனர்.