districts

img

தூத்துக்குடியில் புத்தாண்டு கோலாகலம் தேவாலயங்கள், கோயில்களில் சிறப்பு வழிபாடு

தூத்துக்குடி, ஜன.1- தூத்துக்குடி மாவட்டத்தில் ஆங்கில  புத்தாண்டு கோலாகலமாக கொண்டா டப்பட்டது. கிறிஸ்தவ ஆலயங்கள், கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தன.  2023ம் ஆண்டு பிறப்பை முன்னிட்டு தூத்துக்குடியில் நள்ளிரவு 12.1 மணிக்கு வாண வேடிக்கைகள் விண்ணைப் பிளக் கும் வகையில் வெடித்து புத்தாண்டை வர வேற்றனர். தூத்துக்குடி பனிமய மாதா ஆல யத்தில் சிறப்பு ஆராதனையும், இந்த  ஆண்டு சுபிட்சமாக எல்லா வளங்களுடன்  விளங்க பிரார்த்தனையும் நடந்தது. ஏராள மான இறைமக்கள் பங்கேற்றனர். இதனை தொடர்ந்து சிறுவர் முதல் பெரியவர்கள் வரை ஒருவொருக்கொருவர் புத்தாண்டு வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டனர். இதே போல் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து சர்ச்களிலும் புத்தாண்டை ஒட்டி சிறப்பு ஆராதனைகள் நடந்தன.  புத்தாண்டை ஒட்டி மாவட்டத்தில் உள்ள அனைத்து கோயில்களிலும் சிறப்பு  பூஜைகள் நடந்தன. தூத்துக்குடி வைகுண்ட பதி பெருமாள் கோயிலில், புத்தாண்டை ஒட்டி அதிகாலை 4.30 மணிக்கு நடை திறக்  கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. தூத்  துக்குடி சிவன் கோயிலிலும் புத்தாண்டை  ஒட்டி சங்கர ராமேஸ்வரர், பாகம்பிரி யாள் அம்மன், விநாயகர் உள்ளிட்ட தெய்  வங்களுக்கு சிறப்பு அலங்காரம் செய் யப்பட்டு பூஜைகள் நடந்தன. ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமியை வழிபட்டனர். இதுபோல் மாவட்  டத்தில் உள்ள அனைத்து முக்கிய கோயில்  களில் சிறப்பு பூஜைகள் நடந்தன.