districts

img

ஆஃப்ரீன் பாத்திமாவுக்கு நீதி கேட்டு தேவாரத்தில் ஆர்ப்பாட்டம்

தேனி, ஜூன் 13- நபிகள் நாயகம் பற்றி  தவறான கருத்து தெரிவித்த பாஜக செய்தித் தொடர்பாள ராக இருந்த நுபுர் சர்மா, நவீன் குமார் ஜிண்டால் ஆகியோரை கைது செய்ய வலியுறுத்தி போராட்டம் நடத்தியவர்களின் வீடு களை புல்டோசர் கொண்டு  இடிக்கப்பட்ட சம்பவத்திற் கும், பாதிக்கப்பட்ட அஃப்ரீன் பாத்திமாவுக்கு நீதி கேட் டும், உ,பி மாநிலத்தில் ஆதித்யநாத் அரசை டிஸ்மிஸ் செய்ய வலியுறுத்தி யும் தேவாரத்தில் மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்  பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்  றது. மாவட்டச் செயற்குழு உறுப்பினர் இ.தர்மர், ஏரியா செயலாளர் டி.ராஜா ஆகி யோர் தலைமையில் நடை பெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாவட்டச் செயலாளர் ஏ.வி.அண்ணாமலை, மாவட்டச் செயற்குழு உறுப்பினர் சி. முருகன், விவசாயத் தொழி லாளர்கள் சங்க மாவட்டத் தலைவர் எல்.ஆர்.சங்கர சுப்பு, வி.மோகன், தீண் டாமை ஒழிப்பு முன்னணி மாநிலத் தலைவர் செல்லக்கண்ணு உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.