தேனி, ஏப்.5- பெரியகுளம் அருகே நார் தொழிற் சாலையில் மீண்டும் தீ விபத்து ஏற்பட்டு தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் போராடினர். பெரியகுளம் அருகே முருகமலை பகுதி யில் தனியார் நார் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இங்கு பாலைவனப் பகுதியில் காய்கறிகள் உற்பத்தி செய்வதற்காக தேங் காய் மட்டையில் இருந்து பிரித்தெடுக்கப் படும் நார்களை பதப்படுத்தி மூலப்பொருள் தயாரித்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றது. இந்த நிலையில் தேங்காய் மட்டையில் இருந்து பிரித்தெடுத்து நார்களில் இருந்து மூலப் பொருட்கள் தயாரித்து வெளிநாட் டிற்கு ஏற்றுமதி செய்வதற்காக குடோனில் தேக்கி வைக்கப்பட்டிருந்தது. திங்கள் இரவு பத்து மணி அளவில் திடீரென தீப்பற்றியது. தொழிற்சாலை நிர்வாகத்தினர் உடனடி யாக ஆலையில் பணிபுரிந்த அனைவரை யும் வெளியேற்றினர். இதனைத் தொடர்ந்து பெரியகுளம் தீயணைப்பு துறையினருக்குத் தகவல் தெரி வித்தனர். தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்ட னர். காற்று வேகமாக வீசியதால் தொடர்ந்து தீ மளமளவென பரவி குடோன் முழுவதும் பரவியது. தீயை பரவ விடாமல் அணைப்பதற்கு ஆண்டிபட்டி, தேனி, வத்தலகுண்டு உள் ளிட்ட பகுதிகளிலிருந்து தீயணைப்பு வீரர் களுடன் நான்கு வாகனங்கள் வரவழைக் கப்பட்டது. அவர்கள் தீயைக் கட்டுப்படுத் தும் பணியில் ஈடுபட்டனர். செய்வாய் காலை யிலும் தொடர்ந்து தீ எரிந்து கொண்டே இருந்தது. இந்த தீ விபத்து குறித்து பெரியகுளம் காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் முத்துக்குமார் மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்தை பார்வையிட்டு தீ விபத் துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த தொழிற்சாலையில் கடந்த 30-ஆம் தேதி ஏற்கனவே பெரிய அளவில் தீ விபத்து ஏற்பட்டு 20 மணி நேரம் போராடி தீயணைப்பு துறையினர் தீயை கட்டுப்படுத் தினர். இந்த நிலையில் மீண்டும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.