districts

img

உலக சுற்றுச்சூழல் தின விழிப்புணர்வு மணல் சிற்பம்

தஞ்சாவூர், ஜூன் 5 -  தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே உள்ள  காலகம் பகுதியைச் சேர்ந்த வர் ரதி. இவர் இல்லம் தேடிக்  கல்வி திட்டத்தில் தன்னார்வ லராகப் பணியாற்றி வரு கிறார். இவரிடம் 20-க்கும்  மேற்பட்ட மாணவ, மாணவி கள் பயின்று வருகின்றனர்.  ரதி மணல் சிற்பம் உரு வாக்குவதில் திறமை மிக்க வர். இதற்கான எந்தவித சிறப்புப் பயிற்சியும் பெறா மல் தானாகவே, சொந்த முயற்சியில் மணல் சிற்பம் உருவாக்கக் கற்றுக் கொண்ட வர். ஏற்கனவே அப்துல் கலாம், இயற்கை உருவங் கள் ஆகியவற்றை மணல் சிற்பம் மூலம் உருவாக்கி விழிப்புணர்வு ஏற்படுத்தி உள்ளார்.  இந்நிலையில் ஞாயி றன்று, உலக சுற்றுச் சூழல் தினத்தை முன்னிட்டு, விழிப் புணர்வு மணல் சிற்பத்தை உருவாக்கி உள்ளார். இதனை இல்லம் தேடிக்  கல்வித் திட்டம் ஒருங்கிணைப் பாளர்கள் செ.ராமநாதன், கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் பார்வையிட்டு பாராட்டினர். ரதி உருவாக்கி உள்ள மணல் சிற்பத்தை அப்பகுதி மாணவர்கள், சமூக ஆர்வ லர்கள், பொதுமக்கள் ஆர்வ முடன் பார்வையிட்டு சென்ற னர்.