districts

பொதுமக்களின் நிதி பங்களிப்போடு திருபுவனம் அரசுப் பள்ளியில் மேற்கூரை திறப்பு

கும்பகோணம், நவ.11 - தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் தாலுகா, திருபுவனம் அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் உலோக தகட்டினாலான மேற்கூரை பள்ளி மாணவ-மாணவிகளின் வசதிக்காக அமைக்கப்பட்டுள்ளது. திருபுவனம் பொதுமக்கள், பல்வேறு அறக்கட்டளையினர் மற்றும் ஆசிரியர்களின் பங்களிப்புடன் கிடைக்கப் பெற்ற ரூ.4 லட்சம்  மதிப்பில் அமைக்கப்பட்ட இத்திறப்பு விழா விற்கு பள்ளியின்  தலைமை ஆசிரியர் பாண்டி யன் தலைமை வகித்தார். பள்ளி மேலாண்மை  குழு தலைவர் காயத்ரி, துணைத்தலைவர் அம்பிகா, பேரூராட்சி மன்ற தலைவர் அமுத வல்லி கோவிந்தராஜ், பேரூராட்சி  செயலா ளர் மங்கையர்கரசி, பேரூராட்சி துணைத் தலைவர்  ரவிசங்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழக அரசின் தலைமை கொறடா கோவி.செழியன் மற்றும் மயிலாடுதுறை நாடாளுமன்ற உறுப்பினர் செ.ராமலிங்கம் ஆகியோர் ரிப்பன் வெட்டி மேற்கூரையை திறந்து வைத்து சிறப்புரையாற்றினர். பேரூ ராட்சி துணைத் தலைவர் ரவிசங்கர் ராஜா, பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்ட னர்.  “தனியார் பள்ளிகளை வெல்லக்கூடிய சக்தி அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு  உள்ளது என்றும், இந்த பள்ளியில் உள்ள  பழைய கட்டிடங்களை இடித்துவிட்டு நபார்டு  திட்டத்தில் அடுத்த கல்வியாண்டுக்குள் ரூ.1  கோடியே 50 லட்சம் மதிப்பீட்டில் புதிய பள்ளி  கட்டிடம் உருவாக்கி தரப்படும்” என கோவி. செழியன் தெரிவித்தார்.