districts

தரமான விதைகளை மட்டுமே விற்பனை செய்ய வேண்டும் விதை ஆய்வு  துணை இயக்குநர் எச்சரிக்கை

தஞ்சாவூர், ஜன.9-  தரமான நல்ல முளைப்பு திறன் உள்ள  உளுந்து விதைகளை மட்டுமே நடப்பு  பருவத்தில் விவசாயிகளுக்கு விற்பனை செய்ய வேண்டும் என விதை ஆய்வு துணை  இயக்குநர் முனைவர் ந.விநாயகமூர்த்தி, தனியார் விதை விற்பனையாளர்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளார். விதை உற்பத்தியாளர்கள் மற்றும் விற்  பனையாளர்கள், சான்று பெற்ற சான்று  அட்டை பொருத்தப்பட்ட தரமான உளுந்து  விதைகளை மட்டுமே விவசாயிகளுக்கு விற்பனை வேண்டும் என விதை ஆய்வுத்  துறை மூலம் எச்சரிக்கை விடுக்கப்பட் டுள்ளது. விவசாயிகளுக்கு தரமான உளுந்து விதைகள் விற்பனையின் போது, விதைச்  சட்ட விதிகள்படி, கொள்முதல் பட்டியலில்  விதை விற்பனை உரிமம் எண், ரகம், நிலை,  குவியல் எண், காலாவதி நாள், உற்பத்தி யாளர் விவரம் உட்பட அனைத்து தக வல்களும் இடம் பெற்றிருக்க வேண்டும்.  சான்று அட்டை குறிப்பாக ஆதார நிலை மற்றும் சான்று நிலை விதைகளையே விற்  பனை செய்யவேண்டும். விதை விற்பனை யாளர்கள் தரமான உளுந்து விதைகளின் தரத்தை உறுதிப்படுத்தும் வகையில், குவி யல் வாரியாக விதை மாதிரி பரிசோதனை செய்த முளைப்பு அறிக்கை மற்றும் பதிவுச்  சான்றிதழ் ஆகியவற்றை, கண்டிப்பாக தங்களது விற்பனை நிலையங்களில் வைத்திருக்க வேண்டும். தர பரிசோதனை அறிக்கை, பதிவுச்  சான்றிதழ் இல்லாத உளுந்து விதை களை விற்பனை செய்யும் விதை விற்ப னையாளர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட நிறு வனத்தின் மீது விதைச்சட்டம் 1966 மற்றும் விதை விதிகள் 1968ன் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும்.  விவசாயிகளுக்கு, சான்று பெற்ற உளுந்து விதைகளான வம்பன் 6, வம்பன் 8, வம்பன் 10, வம்பன் 11, ஏடிடீ 5, டீ 9  போன்ற விற்பனை செய்யும் போது, விற் பனை ரசீது கொடுக்க வேண்டும். அதில், விதையின் பெயர், ரகம், குவியல் எண்,  காலாவதி நாள் ஆகியவற்றுடன், விவசாயி  பெயர், முகவரி மற்றும் விதை வாங்குபவ ரின் கையொப்பம் பெறப்பட்டிருக்க வேண்டும்.