தஞ்சாவூர், ஜன.11- சட்டமன்ற கூட்டத் தொடரில் அர சின் அறிக்கையை புறக்கணித்து, தமிழ்நாட்டின் நலன்களுக்கு எதி ராக செயல்படும் ஆளுநர் ஆர்.ன். ரவியை கண்டித்து தஞ்சாவூர் ரயி லடியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பா ளர் சு.பழனிராஜன் தலைமை வகித்தார். மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் சின்னை.பாண்டியன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். தஞ்சை பழைய பேருந்து நிலை யம் அரசு விரைவு போக்குவரத்து கழக பணிமனை முன்பு சிஐடியு மாவட்ட துணைச் செயலாளர் கே. அன்பு தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அனைத்து துறை ஓய்வுதியர் சங்க மாவட்ட ஒருங்கிணைப்பாளர் என். குருசாமி, சிஐடியு ஆட்டோ சங்கம் மாநகரச் செயலாளர் ஏ.ராஜா, சிபிஎம் மாவட்டக்குழு உறுப்பினர் என்.சரவணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் திருவையாறு பேருந்து நிலையத்தில் ஒன்றியச் செயலா ளர் ஏ.ராஜா தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தை விளக்கி மாவட் டச் செயற்குழு உறுப்பினர் கே. பக்கிரிசாமி கண்டன உரையாற்றி னார். கும்பகோணம் அரசு போக்கு வரத்து தலைமை அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத் திற்கு போக்குவரத்து தொழிலாளர் சங்க மண்டல தலைவர் காரல் மார்க்ஸ் தலைமை வகித்தார். சிஐ டியு மாநில செயலாளர் சி.ஜெய பால், மண்டல பொதுச் செயலா ளர் மணிமாறன், மண்டல பொரு ளாளர் ராமசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
திருச்சி
இந்திய மாணவர் சங்கம் சார் பில் புதனன்று திருச்சி அரசு சட்ட கல்லூரியில் மாவட்ட துணை தலைவர் ஹரி ராமச்சந்திரன் தலை மையில் நடைபெற்ற ஆர்ப்பாட் டத்தில் மாவட்ட செயலாளர் ஜி.கே.மோகன் கண்டன உரை யாற்றினார்.