தஞ்சாவூர், டிச.10 - தஞ்சாவூர் குந்தவை நாச்சியார் அரசு மகளிர் கல்லூரி விடுதியில், பிற்படுத் தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் செம்மொழி நூல கத்தை நாடாளுமன்ற உறுப்பினர் ச.சு.பழநிமாணிக்கம் திறந்து வைத்தார். கல்லூரி விடுதிகளில் தங்கி பயிலும் மாணவியர்களின் கல்வி அறிவு மற்றும் பொது அறிவினை வளர்க்கவும், அரசு வேலைவாய்ப்பை பெறும் வகையில் பொது அறிவை மேம்படுத்திக் கொள்ள மாணவிகளுக்கு உதவிடும் வகையில் தமிழகம் முழுவதும் உள்ள 259 கல்லூரி விடுதிகளில் செம்மொழி நூலகங்களை திறக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார். அதன்படி, தஞ்சாவூர் குந்தவை நாச்சியார் அரசு மகளிர் கல்லூரியில் உள்ள பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் ஆகி யோர் தங்கியுள்ள நான்கு விடுதி கட்டி டங்களிலும் செம்மொழி நூலகங்கள் அமைக்கப்பட்டன. இதற்காக ரூ.1 லட்சம் செலவில் நூல்கள், தளவாடச் சாமான்கள் வாங்கப்பட்டு நூலகம் அமைக்கப்பட்டது. இந்த நூலகங்க ளின் திறப்பு விழா சனிக்கிழமை நடை பெற்றது. விழாவுக்கு மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமை வகித்தார். தஞ்சாவூர் தொகுதி நாடாளு மன்ற உறுப்பினர் ச.சு.பழநிமாணிக்கம் நூலகங்களை திறந்து வைத்து, மாண விகளிடம் நூல்களை வாசிக்க வழங்கி னார். மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலு வலர் கே.ரேணுகாதேவி வரவேற்றார். நிகழ்ச்சியில் தஞ்சாவூர் மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன், துணை மேயர் அஞ்சுகம் பூபதி, மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் உஷா புண்ணிய மூர்த்தி, வட்டாட்சியர் சக்திவேல், விடுதி காப்பாளர்கள் மற்றும் மாணவிகள் கலந்து கொண்டனர்.