districts

img

மினி தடகளப் போட்டியில் வெற்றி 4 வயது மாணவருக்கு பாராட்டு

தஞ்சாவூர், நவ.3-  மதுரையில் நடந்த மினி தடகளப் போட்டியில் முதலி டம் பெற்ற, தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி டாக்டர்  ஜே.ஸி. குமரப்பா செண்டினரி வித்யா மந்திர் மெட்ரிக்  மேல்நிலைப்பள்ளியில் படிக்கும், 4 வயது மாணவருக்கு பாராட்டு விழா நடைபெற்றது.  அக்டோபர் 30 ஆம் தேதி மதுரை அக்னி சிறகுகள்  விளையாட்டு கிராமம் சார்பில் 3 ஆவது ஆண்டு தமிழக  அளவில் மினி தடகள போட்டிகள் நடைபெற்றன. இப் போட்டியில், 4 வயது பிரிவில் டாக்டர் ஜே.ஸி.குமரப்பா செண்டினரி வித்யா மந்திர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி யு.கே.ஜி வகுப்பை சேர்ந்த மாணவர் தேவகுரு 50 மீட்டர்  தடகள போட்டியில் முதலிடமும், நீளம் தாண்டுதல் போட்டி யில் முதலிடமும் வெற்றி பெற்றார். அவருக்கு சான்றி தழ்கள், பதக்கங்கள் வழங்கப்பட்டன. போட்டியில் வெற்றி பெற்ற மாணவர் தேவகுருவை யும், பயிற்சி அளித்த உடற்கல்வி ஆசிரியர் முரளிதரனை யும், தமிழ்நாடு தனியார் பள்ளிகள் தாளாளர் சங்க நிறு வனத் தலைவர் முனைவர் ஸ்ரீதர், நிர்வாக இயக்குநர் நாகூர்பிச்சை, குமரப்பா செண்டினரி பவுண்டேஷன் பொருளாளர் அஸ்வின்ஸ்ரீதர், பள்ளி முதல்வர் சர்மிளா, ஆசிரியர் ஜெரினா, அறங்காவலர்கள் ராமு, கணபதி,  ஆனந்தன், நபிஷாபேகம், ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் ஆகியோர் பாராட்டினர்.