districts

கோட்சே - ஆப்தே பெயரில் பாரத ரத்னா விருது திராவிடர் கழகம் கண்டன ஆர்ப்பாட்டம்

தஞ்சாவூர், பிப்.5 - மத்தியப்பிரதேசம் குவா லியரில் இந்து மகாசபை, சாமியார்கள் கோட்சே -  ஆப்தேஸ்மிருதிவாஸ் இரு வருக்கும் விழா நடத்தி, அதில் ‘கோட்சே - ஆப்தே பாரத ரத்னா’ என்ற பெயரில் விருது வழங்குவோம் என காந்தி நினைவு நாளில் அறிவித்து, காந்தியடிகளை கேவ லப்படுத்துவதாக கூறியும், அகண்ட பாரதத்தை உரு வாக்குவோம் என அறிவித்த  மதவெறியர்கள் மீது நடவ டிக்கை எடுக்காத ஒன்றிய அரசு, மத்தியப்பிரதேச மாநில அரசைக் கண்டித்தும், திராவிடர் கழகம் சார்பில் பேராவூரணி பெரியார் சிலை  அருகில் மாநில பொதுக்குழு உறுப்பினர் இரா. நீல கண்டன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

பாபநாசம்
பாபநாசம் தலைமை அஞ்சல் அலுவலகம் முன்பு திராவிடர் கழகம் சார்பில்  நடைபெற்ற ஆர்ப்பாட்டத் திற்கு கும்பகோணம் மாவட்டச் செயலாளர் சு. துரைராசு தலைமை வகித் தார்.

மன்னார்குடி 
மன்னார்குடி பெரியார் சிலை எதிரில் திராவிடர்  கழகத்தின் சார்பில் நடை பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு திக மாவட்ட தலைவர் ஆர்.பி.எஸ்.சித்தார்த்தன் தலைமை வகித்தார். மாவட்டச்  செயலாளர் கோ.கணேசன் மற்றும் மாவட்ட-மாநில நிர்வாகிகள் உரையாற்றினர்.