தஞ்சாவூர்/பெரம்பலூர், அக்.2 - தஞ்சாவூர் பூமாலை வணிக வளாகத்தில் காந்திய டிகளின் 154-ஆவது பிறந்த நாள் விழா மற்றும் தீபாவளி சிறப்பு விற்பனை துவக்க விழாவினை மாவட்ட ஆட்சி யர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் ஞாயிறன்று துவக்கி வைத்தார். பின்னர் ஆட்சியர் பேசு கையில், தமிழ்நாடு கதர் கிராமத் தொழில் வாரியம் மற்றும் செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் காந்தியடிகளின் 154 ஆவது பிறந்த நாள் விழா மற்றும் தீபாவளி சிறப்பு விற்பனை துவக்க விழா துவக்கி வைக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு நமது மாவட் டத்திற்கு கதர் விற்பனை குறியீடாக இந்த ஆண்டு ரூ.58.22 லட்சம் இலக்கு நிர்ணயம் செய்துள்ளது. இச்சிறப்பு விற்பனைக்கு கதர் பருத்தி, பட்டு, பாலி யஸ்டர்க்கு 30 சதவீதமும், உல்லனுக்கு 20 சதவீதம் சிறப்பு தள்ளுபடி வழங்கப் பட்டு வருகிறது என்றார். முன்னதாக மாவட்ட ஆட்சியர் அண்ணல் காந்திய டிகளின் உருவப் படத்தை திறந்து வைத்து மலர் தூவி மரியாதை செய்து தீபாவளி சிறப்பு முதல் விற்பனையை துவக்கி வைத்தார். இவ்விழாவில் கதர் கிராம தொழில்கள் உதவி இயக்குனர் (கூ.பொ) தி. கோபாலகிருஷ்ணன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் க.பிரேமலதா, காதி கிராப்ட் மேலாளர் ஜி.சாவித்திரி கலந்து கொண்டனர்.
பெரம்பலூர்
பெரம்பலூர் மாவட்டம் பழைய பேருந்து நிலைய வளாகத்தில் உள்ள அண்ணல் காந்தியடிகள் சிலைக்கு மாவட்ட ஆட்சியர் ப.ஸ்ரீவெங்கடபிரியா மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர், செய்தி மக்கள் தொடர்புத் துறை மற்றும் தமிழ்நாடு கதர் கிராம தொழில் வாரி யத்தின் சார்பில் உள்ள காதி கிராப்ட் அங்காடியில் தீபாவளி கதர் சிறப்பு தள்ளு படி விற்பனையை ஞாயி றன்று துவக்கி வைத்தார். திருச்சி உதவி இயக்குநர் (கதர் கிராமத் தொழில்கள்) அலுவலக கட்டுப்பாட்டில் பெரம்பலூர் பழைய பேருந்து நிலையத்திற்குள் காதி கிராப்ட் செயல்பட்டு வருகிறது. பெரம்பலூர் மாவட்டத்திற்கு வருடாந்திர கதர் விற்பனை குறியீடாக 2021-22 ஆம் ஆண்டிற்கு ரூ.21.32 லட்சம் நிர்ணயம் செய்யப்பட்டதில், ரூ.12.52 லட்சம் விற்பனை எய்தப் பட்டுள்ளது. கிராமப் பொருட் கள் விற்பனை ரூ.38.38 லட்சம் விற்பனை செய்யப் பட்டுள்ளது. இவ்வாண்டு (2022-23) கதர் விற்ப னைக்கு ரூ.55 லட்சம் குறியீ டாக நிர்ணயம் செய்யப் பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.