தஞ்சாவூர், மார்ச் 20- தஞ்சாவூரில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட் டம், மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலி வர் தலைமையில் நடை பெற்றது. கூட்டத்தில், இலவச வீட்டு மனைப் பட்டா, முதி யோர் உதவித்தொகை, குடும்ப அட்டை, பட்டா மாறு தல், கல்விக் கடன் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 510 மனுக்களை பொதுமக்கள் ஆட்சியரிடம் வழங்கினர். தொடர்ந்து, சமூக பாது காப்புத் திட்டத்தின் மூலம், முதலமைச்சரின் உழவர் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் தற்காலிக இயலாமை உத வித்தொகை பெறுவதற் கான ஆணையினை ஒரு வருக்கும், தஞ்சை வட்டத் தைச் சேர்ந்த ஒரு பயனா ளிக்கு விலையில்லா இலவச வீட்டு மனை பட்டாவிற்கான ஆணையையும் ஆட்சியர் வழங்கினார். இதனைத் தொடர்ந்து மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு மாசுக் கட்டுப் பாட்டு வாரியம் சார்பில், ‘‘நெகிழி மாசு இல்லாத தஞ்சாவூர் மாவட்டம்’’ மாவட்ட சுற்றுச்சூழல் திட் டம் செயலாக்க புத்தகத் தினை ஆட்சியர் வெளியிட்டார்.