கும்பகோணம், பிப்.23 - தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள திருபுவனம் திகோ சில்க்ஸ்-இல் பட்டு திருவிழா நடைபெற்று வருகிறது. இதுகுறித்து திகோ சில்க்ஸ் மேலாண்மை இயக் குநர் செல்வம் கூறுகையில், இந்தியாவில் பட்டு விற்பன ையில் முதன்மை நிறுவன மான திகோ சில்க்ஸ் என்ற ழைக்கப்படும் திருபுவனம் பட்டு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கத்தில் பிப்.10 முதல் பிப்.26 வரை பட்டு திரு விழா நடைபெற்று வரு கிறது. பட்டு திருழாவில் விற்பனை இலக்கு ரூ.5 கோடி என நிர்ணயிக்கப் பட்டு, மேற்பட்ட திருவிழா வில் இதுவரை ரூ.3 கோ டிக்கு விற்பனை மேற்கொள் ளப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்கள் பட்டு திருவிழாவினை கால நீட்டிப்பு செய்ய வேண்டும் என கேட்டுக் கொண்டதற் கிணங்க, மார்ச் 16 ஆம் தேதி வரை திகோ சில்க்ஸ் பட்டு திருவிழாவை நீட்டிப்பது என்றும், மேற்படி திரு விழா நாட்களில் ரூ.10 கோடி அளவிற்கு விற்பனை நடை பெறும் என எதிர்பார்க்கப்படு கிறது. இதனால் இந்த ஆண்டு விற்பனையில் ரூ.60 கோடி இலக்கினை எட்டி விடு வோம் என்றார். மேலும் மாசிப் பட்டு திரு விழாவின் ஒரு அங்கமாக பாரம்பரியமிக்க திருபுவனம் பட்டு சேலைகளின் மாபெ ரும் கண்காட்சி 26.2.2022 அன்று திருபுவனம் பட்டு சேலைகளுக்கு புவிசார் குறி யீடு பெற்ற திகோ சில்க்ஸில் கொண்டாடப்படுகிறது.
கண்காட்சியில் 20 ஆண்டு களுக்கு முன்னர் வாங்கி பயன்படுத்தப்பட்டு பொது மக்களிடம் உள்ள திருபு வனம் பட்டு சேலைகள் கண் காட்சியில் காட்சிப்படுத்தப் பட உள்ளன. இந்த சேலை களை தேர்வு குழு மூலமாக தேர்ந்தெடுத்து, சிறந்த பட்டு சேலைகளுக்கு முதல் பரி சாக ரூ.25 ஆயிரம், இரண் டாம் பரிசா ரூ.15,000, மூன்றாம் பரிசாக ரூ.10,000 மதிப்புள்ள திருபுவனம் பட்டு சேலைகள் வழங்கப்படும். மேற்படி கண்காட்சியில் வாடிக்கையாளரிடம் இருந்து வரப்பெற்ற பழைய பட்டு சேலைகளை கண்காட்சியில் காட்சிப்படுத்துவதற்கு பரா மரிப்பு செலவினமாக சேலை ஒன்றுக்கு ரூ.200 வழங்கப்ப டும். திருபுவனம் பட்டு சேலைகளை கண்காட்சி யில் வைப்பதற்கு வாடிக்கை யாளரிடம் இருந்து ஆயிரத் துக்கும் மேற்பட்ட பட்டு சேலைகள் வரும் எனவும், மேலும் சுமார் 60 ஆண்டு களுக்கு முந்தைய திருமண சேலைகள் கண்காட்சிக்கு வரும் என எதிர்பார்ப்பதாக வும் சங்க மேலாண்மை இயக்கு நர் செல்வம் தெரிவித்தார்.